பக்கம்:பாட்டுத் திறன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 3? உடலும் தசைமிக்க உடம்பும்கூட வழக்கத்திற்கு மாறாகவிளைவு களை உண்டாக்கிவிடுகின்றன. உடல், காய்ச்சலால் பீடிக்கப் பெற்றுள்ள பொழுது நம்மால் நன்கு சிந்திக்க முடிகிறதில்லை. சுரப்பிகளில் ஊறும் சாறுகள் தக்க முறையில் அமையாவிடில், உடல் நிலை பாதிக்கப்பெற்று உள்ளமும் மீப்பண்புகளும்" மாறுகின்றன. . இனி, உள்ளம் உடல்மேல் எங்கனம் ஆதிக்கம் செலுத்து கின்றது என்பதைச் சிறிது விளக்குவோம். ஒருவர் அச்சத்தி னால் உடலைக் கொண்டு செய்யும் செயல்களைச் சாதாரணமாக அவரால் செய்ய இயலாது என்பது யாவரும் அறிந்ததே. ஒருவரை ஒரு காய் அல்லது காளை விரட்டும் பொழுது சாதாரணமாக அவரால் தாண்டமுடியாத குட்டிச் சுவரையும் அவர் தாண்டிக் குதித்து ஓடுகின்றார். சில சமயம் அச்சம் ஒருவருடைய உடல் வன்மையை மிகவும் குறைத்து அவரை எவ்விதச்செயலும் ஆற்ற முடியாதபடி செய்து விடுவதுமுண்டு. மனத் திண்மையால் சிலர் செயற்கரிய செயல்களையும் சிறைவேற்றுவர்;பொறுக்க முடியாத துன்பங்களையும் சகித்துக்கொள்ளுவர்.மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டதும் பசி தோன்றாது போகின்றது; துக்கமான செய்தி வந்தால் உள்ளம் தளர்ந்து போகின்றது. உணவை உற்சாகத் துடன் உண்டால் செரிமான நீர்கள் நன்கு ஊறுகின்றன. சினமும் அச்சமும் செரித்தலைத் தடுத்து விடுகின்றன. மேலான அறிவுடைய விலங்குகள் கன்கு வளர்ந்து தேர்ச்சி பெற்ற மூளையைப் பெற்றுள்ளன. மீனைவிடப் பறவையும், பறவையைவிட எலியும், எலியைவிட நாயும், நாயைவிடக் குரங் கும், குரங்கைவிட மனிதனும் படிப்படியே கன்கு வளர்ந்த மூள்ை களையும் அறிதிறனையும் பெற்றிருக்கக் காண்கின்றோம். இவற்றிலிருந்து உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள உறவினை அறிந்து கொள்ளலாம். உடலில் மாறுபாடுகளை ஏற்படுத்தாத உள்ள நிகழ்ச்சி களைக் காண்பதளிது. அங்ங்னமே, உள்ள நிலையை மாற்றாத உடற்செயல்கள் இருக்கமுடியாது. இக்காரணம் பற்றியே நரம்பு களின் அமைப்பு, அவை செயற்படும் முறை, உணவு செரித்தல், 8. sausrų - Temperament.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/49&oldid=813089" இலிருந்து மீள்விக்கப்பட்டது