பக்கம்:பாட்டுத் திறன்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுத் திறன் 64 யான வயிற்று வலியால் தான் மேற்கொண்டிருக்கும் செயலைக் கைவிடச் செய்யவும் கூடும். உணர்ச்சி நீக்கத்தின் பொழுது, மருத்துவர் கத்தியால் அறுப்பதை நோயாளி உணர்வதில்லை யன்றோ? கடுமையாகப் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது போர்வீரன் தன்மீது படும் காயத்தை அறிவதில்லை. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.* என்றல்லவோ போர்வீரன் நிலையினைக் காட்டுகின்றார் வள்ளுவப்பெருந்தகை: தன் மார்பில் பதிந்த வேலையும் பொருட்படுத்தாது, அது பாய்ந்ததை அறியாது, போர்புரியும் வீரனைக் காண்கின்றோம். கருத்து கிலைச்செயல் : மனிதன் சூழ்நிலையுடன் கொடுக் கல்-வாங்கல் முறையில் பொருத்தப்பாடடைகின்றான் என்றும், இப்பொருத்தப்பாடு துாண்டல் - துலங்கல் முறையில் நடைபெறுகின்றது என்றும் மேலே குறிப்பிட்டோம். இதில் மனிதன் தான் பெறும் தூண்டல்களை அவ்வப்பொழுது கும் கிலையிலுள்ள பொருள்களின் குறியீடுகளாகவும், அங்கு நடை பெறும் நிகழ்ச்சியின் குறியீடுகளாகவும் பயன்படுத்துகின்றான். தான் சூழ்நிலையில் இங்குமங்கும் சென்று திரிந்தும், பொருள்களைக் கையாண்டும், கிகழ்ச்சியில் கலந்துகொண்டும் துலங்குகின்றான். அவன் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதனைத் தன் விருப்பப்படி இயக்குகின்றான். ஆனால், மனிதனிடமும் ஒரளவு சில உயர் உயிரினங்களிடையேயும் கருத்து நிலைச்செயல்' என்ற ஒன்று நடைபெறுகின்றது. இதில் அவ்வப்பொழுதுள்ள" சூழ்நிலை பங்கு பெறுவதில்லை, கருத்துநிலை என்பது கருத்துகள் கொண்ட ஒரு தெளிவான மனச்செயல் ஆகும்; இது தெளிவான புலனுணர் நிலையுமன்று; அன்றி இயக்க நிலையுமன்று. இதில் புலனுணர் தூண்டல்கள் அவ்வப்பொழுதுள்ள பொருள்களின் குறியீடுகளாகப் பயன்படுவதில்லை; அவ்வப்பொழுதுள்ள நிலைமையை மாற்றுவதில் தசையியக்கங்களும் பங்குபெறுவ தில்லை. எடுத்துக் காட்டாக, சில சமயம் உள்ளத்தைக் 33. *.sos. # #3, #### - Anaesthesia. 34. குறள் .774, 55. Bg5#9 & so so. 34 uá - Ideational activity. 39. அவ்வப்பொழுதுள்ள Present,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாட்டுத்_திறன்.pdf/72&oldid=813167" இலிருந்து மீள்விக்கப்பட்டது