பக்கம்:பாட்டும் கதையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சோறு சமைப்பவள் அன்னை - என்னைச்

சுமந்து வளர்ப்பவர் தந்தை

வாரி அணைப்பவள் அன்னை - தின்ன

வாங்கித் தருபவர் தந்தை.

முத்தம் தருபவள் அன்னை - உச்சி

மோந்து வளர்ப்பவள் அன்னை

கத்தும் குரலினைக் கேட்டால் - மெத்தக்

கண்ணீர் விடுபவள் அன்னை.

பள்ளிக் கெனைக்கூட்டிச் சென்று -- நான்

பாடம் படிப்பதற் கென்று

அள்ளிப் பல நூல்கள் தந்து - என்னை

அன்புடன் காப்பவர் தந்தை.

அன்னையைப் போலொரு தெய்வம் - இந்த

அகிலத்தில் வேறெது மில்லை

தந்தை சொல் போலொரு நீதி - இந்தத்

தாரணி மீதினில் இல்லை.

32