பக்கம்:பாட்டும் கதையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரில் அமைதி.என்ருன் - நல்ல பஞ்ச சீலமென்ருன் மார்பினில் ரோசாவை - அவன் மகிழ்ந்து சூடிவந்தான் மாலைச் செங்கதிரோன் - மேற்கு மலையில் வீழ்வதைப்போல் பால்வடியும் முகத்தான் - நேருப் பண்டிதனும் மறைந்தான் மாந்தரில் மாணிக்கமும் - இன்று மண்ணில் மறைந்ததடா காந்தச் சிலையுருவும் - இன்று கற்பனை யானதடா. காவியமும் படைப்போம் - அவன் கதையை எழுதிவைப்போம் ஒவியமும் படைப்போம் - அவன் உருவைத் தீட்டிவைப்போம்.