120 பாட்டும் தொகையும்
அவன் வரைந்து கொள்ளுங்கால் தலைவியின் மேனி யில் தோன்றிய பசலை நோய் கதிரவன் முன் மாயும் இருளாகி விடும்.
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்ததென் ஆயிழை மேனிப் பசப்பு
-கலித்தொகை 42: 31-32
மருதக்கலி பாடியவர் புலவர் மருதன் இளநாகனார் ஆவர். மதுரையின் சிறப்பும் வையையாற்றின் வளமும் மருதக் கலியில் இடம் பெற்றுள்ளன. மதுரைக்கு வையை நீர்ப் பகையுண்டே யொழியப் போர்ப்பகை கிடையாது.
நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் நேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன்
-கலித்தொகை 67: 23-25
மதுரையில் புலன் நா உழவர்கள் புதுமொழி கூட்டுண்ணுகிறார்கள்.
முதுமொழி நீராப் புலனா வுழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனலூர
-கலித்தொகை 68: 4-5
‘வாடிய பூவொடு வாரல் எம் மனை?’ எனக் கூறும் மதுகையுடைய தலைவி, ‘பரத்த’ என்றும் தகாத வொழுக்கம் மேற்கொள்ளும் தலைவனைக் குறிப்பிடுகின் றாள். o
வாடிய பூவொடு வாரலெம் மனை என ஊடி யிருப்பே னாயின் நீடாது
மாய மகிழ்நன் பரத்தைமை
-கலித்தொகை 75 : 18-32