பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

பாட்டும் தொகையும்

தொகை நூல்களில், அதிலும் குறிப்பாகப் பரிபாடலில் முருகவழிபாட்டினைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. என்றாலும் முதன்முதலாக முறையாக முழுமையாக முருகப்பெருமான் உறையும் இடங்களைக் கூறி, ஒவ்வோரிடத்திலும் வாழும் மக்கள் மேற்கொள்ளும் வழிபாட்டினை விரிவாகவும் விளக்கமாகவும் கூறும் நூல் திருமுருகாற்றுப்படை எனலாம். இந்தக் காரணமே சைவ உலகில் திருமுருகாற்றுப்படைக்கு ஒரு தனியிடத்தைத் தந்து, பிற்காலத்தில் தொகுக்கப்பெற்ற பன்னிருதிருமுறை களில் பதினோரா ந் திருமுறையில் ஒரு நூலாக அமைக்கப் பட்டது எனலாம். ஆயினும் இக்காரணங்கொண்டு இந் நூல் பிற்காலத்தைச் சார்ந்த நூல் எனச் சிலர் கூறுவது பொருந்தாது எனலாம். ஏனெனில் நூலின் அமைப்பு முறை, நோக்கம், சொல்லாட்சி முதலிய காரணங்களால் இது சங்க இலக்கியங்களில் ஒன்றெனவும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல் எனவுமே கொள்ள இடமுண்டு.

திருமுருகாற்றுப்படைக்கும் பிற ஆற்றுப்படை களுக்கும் வேறுசில வேறுபாடுகளும் உண்டு. பிற ஆற்றுப் படைகள் ஆற்றுப்படுத்தப்படுவோரது பெயரால் வழங்கும். திருமுருகாற்றுப்படையோ பாட்டுடைத் தலைவன் பெயரால் வழங்குகின்றது. மேலும் சில ஆற்றுப்படை நூற்களில் பொதுவாகக் காணப்படும் ஆற்றுப்படுத்தப்படுவோனை விளித்தல், அவனது வறுமை நிலையை விவரித்தல், ஆற்றுப்படுப்போன் தனது பழைய வறுமை நிலையையும் பெற்ற பரிசிலையும் கூறல் ஆகிய செய்திகள் திருமுருகாற்றுப்படையில் விளங்கக் கூறப் படவில்லையாயினும், ஆற்றுப்படையின் அமைப்பு ஒர் அழகுறு மு ைற யி ல் திருமுருகாற்றுப்படையில் அமைதிருக்கக் காணலாம்.

317 ஆசிரியப்பா அடிகள் கொண்ட இப்பாட்டு, முருக னது அருள் பெற்ற ஒரு புலவன், முருகனது அருள்பெற