பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிப்புரை " மூர்த்திதலம் தீர்த்தம் முறையால் தொடங்கினர்க்கோர் வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்று தாயுமான அடிகள் அருளியுள்ள படி இந் நூல் ஆழ்வார் பெருமக்களால் மங்களா சாசனம் செய்யப் பெற்ற பாண்டி நாட்டுத் திருத்தலப் பயணத்தைப் பற்றியது. படிப்போருக்குப் பயணத்தின் பயனை நல்க வல்லது; பக்தி சுவையையும் ஊட்ட வல்லது, பேராசிரியர் க. சுப்புரெட்டியார் சற்றேறக்குறைய இருபது ஆண்டுகள் தமிழகத்திலும் மற்றுமோர் இருபது ஆண்டுகள் ஆந்திரத்திலும் தமிழ்ப் பணியாற்றிய பெரு மகனார். அவருடைய பல நூல்கள் எங்கள் மூலம் வெளி வந்துள்ளன. எனினும், இந்த நூலை அவர்களின் 'மணிவிழா வெளியீடாகக் கொணர்ந்து பெருமை அடை கின்றோம். தமிழகம் இந்நூலுக்கு ஆதரவு காட்டின் அது பேராசிரியர் ரெட்டியார் அவர்களின் தமிழ்த்தொண்டினைத் தக்க முறையில் பாராட்டுவதற்கொப்பாகும்! எஸ். ஆர். சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகத்தார்