பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தண்காலூர் அப்பன் - Í 4 # என்னும் சிறுவன் மறையின் ஒலி சிறிதும் வழுவாத, வண்ணம் மிக்க மகிழ்ச்சியுடன் அப் பராசரனுடன் நன்கு பொருந்த ஒதுகின்றான். அச்சிறுவனின் திறமைக்கு மெச்சி முத்துக் கோவையாகிய பூணு லும், அதற்கேற்ற அணிகலன்கள் பிறவும் கைக்குக் கடகமும் காதிற்குத் தோடும் ஆகிய இவற்றுடன் த f ன் கொணர்ந்த பண்டச் சிறு பொதியையும் அச் சிறுவ னுக்கு வழங்குகின்றான் பார்ப்பனவாகை பெற்ற அப் பராசரன். தட்சிணாமூர்த்தியின் குடும்பம் செழிப்புடன் இருக்கும் நிலை கண்ட அவ்வூரில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் பொறாமை கொள்ளுகின்றனர். அரசியல் முறைக்கு மாறாகப் புதையற் பொருளைக் கவர்ந்து கொண்டவன் என்று வார்த்திகனைப் பிடித்துக் காவலில் வைக்கின்றனர். பின்னர் அவனைச் சிறைக் கோட்டத்தின் கண் இடுகின்றனர். அந்த வார்த்திகன் மனைவி கார்த்திகை என் பாள் அச் செயல் கண்டு பெரிதும் வருந்தி நிலத்கில் வீழ்ந்து புரண்டு, சினத்தினால் பொங்கி செங்கோலையும் வெறுத்துப் பேசுகின்றாள். கார்த்திகை என்னும் பத்தினிப் பெண்ணுக் குற்ற நிலைமைகண்டு மதுரையில் உள்ள கொற்றவை (ஐயை)என்னும் கோயிலின் சிற்பக் கதவு திறக்கப்படாத நிலையை அடைகின்றது. இதைக் கேட்ட பாண்டியன் நெடுச்செழியன் தன் ஏவலரை வருவித்து இந்நிலையை ஆராயுமாறும் தனது ஆட்சியில் செங் கோன் மைக்கு மாறான செயல் நிகழ்ந்ததுண்டா என் பதை ஆராயுமாறும் பணிக்கின்றான். அப்பணியாளர் ஒற்றர்கள் மூலம் அனைத்தையும் அறிந்து வார்த்திகனைக் சிறைவீடு செய்து அவனை அரசன் முன் கொணர்ந்து நிறுத்தி உண்மையைக் கூறுகின்றனர். அரசன் தன் பணியாளரால் நேர்ந்த தவற்றினுக்கு வருந்தி அவனுக்குப் புகழுரை பல சொல்லி தன் அரசியல் முறை பிழைத்தமைக், குப் பொறுக்குமாறு அவ்வந்தணனை வேண்டுகின்றான்.