பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ? § பாண்டி நாட்டுத் திருப்பதிகள் எம்பெருமானுடைய சிந்தனையை இழந்து ஒரு கணப் பொழுது கழியப்பெற்றாலும் கள்வர் எல்லாச் சொத்து களையும் கொள்ளை கொண்டால் எப்படிக் கதறி அழக் கூடுமோ அப்படிக் கதறி அழவேண்டும் என்பர் அறிவுடையோர். இங்கனம் எம்பெருமான் திருப்பெயரில் ஆழங்கால் பட்ட நம் மனம் ஊர்ப்பெயரை எண்ணுகின்றது. நவ நிதிகள் இங்கு ஒளித்துக்கொண்டுள்ளன என்று அதருமம் குபேரனுக்குக் கோள் சொல்லிய இடமாதல் பற்றி இத்திருத்தலம் திருக்கோளுர்' என்ற திருப்பெயரால் வழங்குகின்றது என்ற புராண வரலாற்றையும் அறிகின்றோம். இந்தச் செய்திகளை அறிந்த நிலையில் திருப்பேரை என்னும் திவ்விய தேசத்திற்குப் புறப்படு கின்றோம்.