பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோட்டியூர் எந்தை 19 கோட்டைகள் எங்கே?' என்று வினவ, நங்கையாரும், ‘சுவாமி, அவற்றைப் பரமபதத்தில் விளைவதாக வித்தி னேன்?, என்று பதிலுரைத்து வணங்கினாராம். இத்திருக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் காணப் பெறு கின்றன. இவற்றால் இத்திருக்கோயிலுக்கு நிவந்தமாக அளிக்கப் பெற்ற பல செய்திகளை அறிகின்றோம். இக் கல்வெட்டுகளினால் இக்கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண் டிலேயே புகழ்மிக்கோங்கி இருந்தது என்பதையும் அறிகின் றோம். இன்னோரன்ன பல செய்திகளை அறிந்த நிலையில் மனநிறைவுடன் காரைக்குடிக்குத் திரும்புகின்றோம்.