பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

பாண்டிமாதேவி / முதல் பாகம்



மரியாதையாக வேண்டிக்கொண்டதைக் கூட அப்போது அவன் பொருட்படுத்தவில்லை.

பதில் சொல்லாமலே அவன் குதிரையை விட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்து, “தளபதிக்குத் தம் மேல் ஏதோ கோபம் போலிருக்கிறது?" என்று எண்ணிக்கொண்டு மேலும் வற்புறுத்திச் சொல்லாமல் பயந்துபோய் நின்று விட்டனர் வைணவனும் அவன் மனைவி கோதையும்.

"தூதனே! நீ கொண்டுவந்திருக்கும் செய்திமட்டும் மெய்யாக இருக்குமானால் இப்போதுள்ள சூழ்நிலையில் நம்மைப்போல் பரிதாபப்படத்தக்கவர்கள் வேறு யாருமில்லை. நல்ல சமயத்தில் நீ வந்திருக்கிறாய். இப்போது அரண்மனையில் மகாமண்டலேசுவரர் உள்படக் கூற்றத் தலைவர்கள் எல்லோரும் இருப்பார்கள். நாம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி எல்லோரிடமும் கலந்து பேசிவிடலாம். குதிரையை மட்டும் இன்னும் சிறிது வேகமாகவே செலுத்திக் கொண்டு போ” என்று தூதுவனைத் துரிதப்படுத்தினான் தளபதி, துரதனும் தன்னால் இயன்ற அளவு குதிரையை வேகமாகச் செலுத்திக் கொண்டு போனான்.

பட்டி மண்டபத்தில் நடந்த கூற்றத்தலைவர்களின் கூட்டத்தில் நம்பிக்கையும் ஒளியும் நிறைந்த எதிர்காலத் தீர்மானங்களை உருவாக்கியிருந்தார்கள்.

அன்று கூற்றத் தலைவர்களுக்கும் மகா மண்டலேசுவரருக்கும் முன்னால் தன் நிலையைப் பற்றி விவரிக்கும்போது மகாராணி வானவன்மாதேவிக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

“மகாமன்னர் இறந்தபிறகு மகாமண்டலேசுவரரும் நீங்களும் எனக்குப் பெரும் பதவியையும் மரியாதையையும் அளித்திருக்கிறீர்கள். ஆனால் இந்த அரசபோக ஆடம்பரங்களை நீண்ட நாட்கள் அனுபவிக்கும் பொறுமை எனக்கு இல்லை. என் அருமைப் புதல்வன் எங்கே இருக்கிறானென்றே நான் அறிய முடியவில்லை. என்னைச் சுற்றிலும் துன்பங்களையும், சூழ்ச்சிகளையும் காண்கிறேன். எனது பிறந்தகமாகிய சேர