பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

பாண்டிமாதேவி / முதல் பாகம்



சொல்லத் தோன்றாமல் 'ஓ' வென்று வீறிட்டு அலறி அழத் தொடங்கினர்.

“ஏன் அழுகிறீர்கள்? விடிந்ததும் விடியாததுமாக இப்போது என்ன நடந்துவிட்டது? விவரத்தைச் சொல்லுங்கள். இதென்ன? மாளிகை முழுவதும் கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறதே!” என்று பதறிப் போய் அதிர்ச்சி யடைந்து கேட்டாள் குழல்மொழி. அதே சமயம் மாளிகையின் எதிர்ப் புறம் பறளியாற்றுப் படகுத் துறையில் 'தடால், தடால்' என்று ஏதோ இடிபடும் ஓசை கேட்டது. நாலைந்து வீரர்கள் என்னவென்று பார்ப்பதற்காக அங்கே ஓடினார்கள். போய்ப் பார்த்தபோது அம்பலவன் வேளான் தன் குடிசைக் குள்ளிருந்து வெளிப்புறமாகத் தாழிட்டிருந்த கதவைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தான். அந்த ஓசையைக் கேட்டு அங்கே போன வீரர்களில் ஒருவன் கதவைத் திறந்து விட்டான். இல்லையானால் கதவு பிழைத்திருக்காது. வேளான் வெளியே வந்து பார்த்தபோது துறையில் கட்டியிருந்த படகைக் காணவில்லை. “ஐயோ! படகைக் காணவில்லையே?’ என்று கூச்சலிட்டான் அவன்.

“போ, ஐயா! உன் ஓட்டைப் படகு போனதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது. கொள்ளை போகக்கூடாத மாபெரும் ஐசுவரியம் நேற்றிரவு இந்த மாளிகையிலிருந்து கொள்ளை போய்விட்டது. மகாமண்டலேசுவரர் கண்ணுக்குக் கண்ணாக வைத்துப் பாதுகாத்து வந்த பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீரவாளும், பொற்சிம்மாசனமும் காணாமல் போய் விட்டனவே!” என்று வேளானின் வாய்க்கூச்சலை அடக்கினான் ஒருவன்.


30. புவன மோகினியின் பீதி


நள்ளிரவுவரை இடையாற்று மங்கலம் நம்பிக்கு ஒற்றிந்து கூறியதற்காக ஆபத்துதவிகள் தலைவன் தன்னை எப்போது, எப்படித் துன்புறுத்துவானோ என்று அஞ்சி மஞ்சத்தில் உறக்கமி