பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

மேலே பார்த்து குறி வைத்து ஒவ்வொரு மாவடுக்களாக எறிந்தான். அவன் எறிந்த மூன்றாவது மாவடு அறையின் வாசலில் தொங்கிய மணியின் நாக்கில் பட்டு அசைந்தது. அடுத்த கணம் கணிரென்று மணியின் ஒசை ஒலித்தது.

எதை எதிர்பார்த்து அவன் அப்படிச் செய்தானோ, அது உடனே நடந்தது. அந்த மணியேசை எழுந்ததுமே, “யாரது?” என்று அதட்டிக் கேட்டுக்கொண்டே பகவதி அறைவாசலுக்கு வந்தாள். இன்னொரு மாவடுவும் மேலே வந்து அவள் அருகே விழுந்தது. அவள் கோபத்தோடு கீழே குனிந்து மாவடு எறியப்பட்ட திசையைப் பார்த்தாள். மறுகணமே அவள் கோபம் மலர்ந்த சிரிப்பாக மாறியது. கீழே அவள் தமையன் வல்லாளதேவன் மாம்ரத்து அடர்த்தியிலிருந்து தலை நீட்டிச் சைகை செய்து அவளைக் கூப்பிட்டான். அவள் வருகிறேன் என்பதற்கு அடையாளமாகப் பதில் குறிப்புக் காட்டிவிட்டுக் கீழே இறங்கினாள்.

“நல்ல வேளை அறைக்குள் உங்கள் தங்கையே இருந்ததனால் என் தந்திரம் பலித்தது! இல்லாவிட்டால் வம்பாகியிருக்கும்” என்றான். மகரநெடுங்குழைக்காதன்.

‘குழைக்காதரே! இப்போதுதான் ஆபத்துதவி’ என்ற உம்முடைய பெயருக்குச் சரியான செயலைச் செய்து விளக்கினர். பிரமாதமான தந்திரம், அபூர்வமான யோசனை, அபாரமான குறி!” எனப் பாராட்டினான் தளபதி வல்லாளதேவன்.

“என்ன அண்ணா இது? என்னைச் சந்திக்க வேண்டுமென்றால் அந்தப்புரத்துக்குள் வந்து உரிமையோடு சந்திக்கலாமே! தோட்டத்தில் நின்று இப்படியெல்லாம் தந்திரம் செய்வானேன்?" என்று கேட்டுக்கொண்டே பகவதி அங்கு வந்து சேர்ந்தான்.

"தந்திரம் என்னுடையதல்ல, பகவதி ! நம் குழைக்காதருடையது!" என்று சொல்லிச் சிரித்தான் தளபதி.

"நினைத்தேன்! அவருடையதாகத்தான் இருக்க வேண்டுமென்று. குறி தவறாமல் எறிகிறாரே!”