பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

325

“என் குறிக்கூடச் சில சமயங்களில் தவறிவிடுகிறது அம்மணி!”—எதையோ உட்பொருளாக அடக்கி வைத்துப்பேசினான் ஆபத்துதவிகள் தலைவன். அவனுடைய அந்தச் சிலேடைப்பேச்சு தளபதி வல்லாளதேவனுக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று.

“குழைக்காதரே! நீங்கள் போய் உங்கள் வேலைகளைக் கவனிக்கலாம். நானும் பகவதியும் தனிமையாகப் பேச வேண்டியிருக்கிறது. உங்களுக்குத் தெரிவிக்கவேண்டிய முக்கியமான செய்திகள் எவையேனும் இருந்தால் பகவதியிடம் சொல்லிவிட்டுப் போகிறேன். அவள் உங்களுக்குத் தெரிவிப்பாள். இப்போது நீங்கள் போகலாம்!” என்று தளபதி கூறினான்.

“நல்லது, வணக்கம்! நான் விடைபெற்றுக் கொள்ளுகிறேன்” என்று வணங்கி புறப்பட்டான் குழைக்காதன். தோட்டத்துப் புதர்கள், பதுங்கிப் பதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு வெளியேற அவனுக்கு ஒத்துழைத்தன.

“அண்ணா! நீங்கள் அரண்மனையிலிருந்து வெளியேறிச் செல்லுவதற்கு முன் உங்களை எப்படியாவது ஒருமுறை சந்தித்துவிட வேண்டுமென்று நானே நினைத்துக்கொண்டு தானிருந்தேன்” என்றாள் பகவதி,

“பகவதி! இப்போது இந்த அரண்மனையில் நிலவும் சூழ்நிலையில் அண்ணனும் தங்கையும் தனியே சந்தித்துப் பேசினால்கூட மிகப்பெரிய அரசியல் இரகசியங்களைப் பேசிக் கொள்வதாக எண்ணிக் கொள்வார்கள்.”

“மற்றவர்கள் என்னென்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் உலகத்தில் எந்தக் காரியத்தையுமே செய்யமுடியாது. அண்ணா! நீங்கள் என்னைக் கூப்பிட்ட காரியத்தைப் பேசுங்கள். நேரம் ஆகிறது” என்று அவனைத் துரிதப்படுத்தினாள் அவன் தங்கை.

“பகவதி: சிறு வயதில் உனக்கு நான் வேடிக்கையாக ஒரு கதையை அடிக்கடி சொல்வேன்; அது நினைவிருக்கிறதா?”

“ஏழை வேளான் ஒருவனுக்கு மண் சுவரின்மேல் கூரையால் வேய்ந்த குடிசைதான் வீடு. விடாத அடைமழையால்