பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


வீட்டுக்குச் செல்வதற்காக அவள் வீதியில் இறங்கி நடந்துகொண்டிருந்தபோது அவளுக்குச் சிறிது தொலைவு முன்னால் நடந்துகொண்டிருந்த யாரோ இரண்டு மூன்று பேருடைய பேச்சு அவளுடைய கவனத்தைக் கவர்ந்தது. வேகமாக நடந்து அவர்களைக் கடந்து முன்னே சென்று விடாமல் அவர்களது பேச்சைக் கேட்டுக்கொண்டே பின் பற்றினாள் அவள். -

“அடே! உன்னைப்போல் பெரிய முட்டாள் உலகத்திலேயே இருக்க முடியாதடா? ஆள் தானாக வலுவில் தேடிக் கொண்டுவந்து நிற்பதுபோல் நின்றான். நீ வம்பு பேசி நேரத்தைக் கடத்தியிருக்காவிட்டால் உடனே அங்கேயே ஆளைத் தீர்த்திருக்கலாம்.” -

“போடா மடையா! நாம் தீர்ப்பதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது அவன்தான் உயிர் தப்பினால் போதுமென்று ஒட்டமெடுத்து விட்டானே?”

“நாமும் துரத்திக்கொண்டுதானே போனோம்! ஒடிக் கொண்டிருந்தவன் திடீரென்று மாயமாக மறைந்து விட்டானே? நாம் என்ன செய்யலாம்? பக்கத்துப் புதர்களிலெல்லாம் துருவிப் பார்த்தும் அகப்படவில்லையே?”

‘கடலில் குதித்திருப்பானென்று எனக்குத் தோன்றுகிறதடா!” -

“எப்படியோ தப்பிவிட்டானே? வேறொருவர் காணாமல் உலாவும் சித்து வித்தை-மாய மந்திரம் வசியம் ஏதாவது அவன் கையிலிருந்த அந்தச் சங்கில் இருந்திருக்குமோ என்னவோ?”

“மாயமாவது, வசியமாவது: அதெல்லாம் ஒன்றுமில்லை. கடலில்தான் குதித்திருப்பான். அப்படியில்லையானால் இன்று காலையில் விடிந்ததிலிருந்து இவ்வளவு நேரமாக இந்தத் தீவு முழுவதும் சுற்றி அலைந்தும் எங்கேயாவது ஒரிடத்தில் நம் கண்ணில் அகப்படாமல் போவானா?”

“நாகைப்பட்டினத்தில் போய் இறங்கியதும் நம்மை அனுப்பியவர்களுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும்!