பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 34 |

“ஊம்! யாரை நொந்துகொள்வது? உலகத்தில் பெண் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளுக்கும் மதிப்பு உயர்ந்து கொண்டேபோகிறது” என்று தளத்தில் நடந்துகொண்டே முணுமுணுத்தது அவருடைய வாய்.

உடல் தளர்ந்து படுத்துக்கொண்டிருந்த இராசசிம்மனுக்கு கண் இமைகள் சொருகி விழிகள்மேற் கவிந்தன. உடலில் அனுபவங்களுக்கும், உள்ளத்துக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்கும் போலும். காலையில் செம்பவழத் தீவிலிருந்து புறப்படுகிறவரை உற்சாகமாக இருந்த அவன் மனமும் இப்போது தளர்ந்திருந்தது. தன் செயல்களால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பற்றியெல்லாம் கற்பனை செய்து பார்த்தது அவன் உள்ளம். கடுங்குளிர் காலத்தில் வெந்நீருக்குள் உடலை முக்கிக் கொண்டால் இதமாக இருக்குமே; அதுபோல் படுக்கையில் படுத்துக் கொண்டே கண்களை மூடிக்கொண்டு நினைவுகளை எங்கெங்கோ படரவிடுவது சுகமாக இருந் அவனுக்கு. ざ 。

ஒவ்வொருவர் முகமாக, ஒவ்வோர் இடமாக, அவன் முன்தோன்றியது. நினைவு நழுவித்துயில் தழுவும் ஓய்ந்த நிலை. காற்று மண்டலத்தின் எட்ட முடியாத உயரத்துக்கு உடலின் கனம் குறைந்து நுண்ணிய உணர்வுகளே உடலாகி மெல்லப் பறப்பதுபோன்ற தன் வசமற்றதோர் பரவசத்தில் ஆழ்ந்திருந்தது LDØMTLD, - ~

மலையுச்சியும், வான் முகடும், கடல் ஆழமும், நிலப்பரப்பும்-இவையத்தனையின் பெருமையும், கம்பீரமும், ஒனறாய்ச் சமைந்து ஒருமுகமாக மாறி அவன் கண்களுக்கு அருகில் நெருங்கி வருகிறது. பயந்துபோய் அவன் கண்களை இறுக்கி மூடிக்கொள்கிறான். -

“இராசசிம்மா! நீ அசட்டுத்தனமாக நடந்துகொண்டு விட்டாய். என்னென்னவோ பெரிய எண்ணங்களை எண்ணிக் கொண்டு உன்னை வரவழைத்து இடையாற்றுமங்கலத்தில் இரகசியமாகத் தங்கவைத்தேன். நான் எதை எதையோ திட்ட மிட்டுக் கொண்டு செய்தேன். நீயும் எதை எதையோ திட்ட மிட்டுக் கொண்டுதான் என்னிடம் வந்து தங்கினாய் என்பது