பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


“விலாசினி! நாளை காலையில் நானும் பவழக்கனிவாயரும் ஊருக்குப் புறப்பட ஏற்பாடு செய்திருக்கிறோம். நீ எங்களோடு வருகிறாயா? அல்லது இங்கே அரண்மனையிலேயே இன்னும் சில நாட்கள் தங்கியிருக்கப் போகிறாயா? உன் விருப்பம் போல் செய்யலாம், நான் எதையும் வற்புறுத்தவில்லை. நீ இங்கே தங்கியிருந்தால் மகாராணியாருக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்கும் போலிருக்கிறது. உன் தோழி பகவதி வேறு இங்கு இருக்கிறாள். உங்கள் இருவரையும் சமீபத்தில் ஊருக்குப் போகவிடும் நோக்கம் மகாராணியாருக்கு இல்லை என்பதை அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது குறிப்பாக அறிந்தேன்” என்று மகளிடம் கூறினார் ஆசிரியர் பிரான். இங்கிருப்பதா? ஊருக்குப்போவதா? என்று ஒரு சிறு போராட்டம் இரண்டொரு விநாடிகள் அவள் மனதில்

“அவசரமில்லை! நிதானமாக யோசித்துச் சொல்லம்மா” என்றார் அவளுடைய அருமைத் தந்தை.

“யோசிப்பதற்கு இதில் என்ன இருக்கிறது அப்பா? நான் இருந்தே வருகிறேன், நீங்கள் போய்விட்டு வாருங்கள்!” ஒரு தீர்மானமான முடிவுடன் தந்தைக்கு மறு மொழி கூறிவிட்டாள் அவள. - -

“மிகவும் நல்லது! இதைத்தானே. நானும் சொன்ன்ேன்” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஆசிரியர்பிரான். - - -

என்னதான் எடுத்தெறிந்து பேசிவிட்டாலும் பழக்கமானவர்களைச் சந்திக்காமலிருக்க மனம் ஒப்புவதில்லையே? பகவதியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது மனமுறிவு ஏற்பட்டுத் திடீரென்று தான் அங்கிருந்து வந்துவிட்டதை அவள் தப்பாக எடுத்துக் கொள்வாளோ என்ற எண்ணம் அன்றிரவு படுக்கையில் படுத்தபோது மீண்டும் விலாசினியைப் பற்றிக் கொண்டது. அப்போது இரவு பத்துப் பதினோரு நாழிகைக்கு மேலாகியிருக்கும். அரண்மனையில் அமைதி பரவத் தொடங்கியிருந்தது. பகவதியைப் போய்ப் பார்த்து அவளோடு சிறிது போது