பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


மகாமண்டலேசுவரருக்குத் தூது அனுப்பி விட்டான். அந்தத் தூதன் மகாமண்டலேசுவரரிடமிருந்து கரவந்தபுரத்துக்கு வாங்கிக்கொண்டுபோன பதில் செய்தியை நம் ஆட்கள் எப்படியோ கைப்பற்றி, இங்கே எனக்குக் கொடுத்தனுப்பி யிருக்கிறார்கள்; அதில் முக்கியமான விவரம் ஒன்று மில்லாவிட்டாலும் , உண்மையிலேயே நாம், இன்றோ நாளையோ படையெடுத்து வந்துவிடப் போகிறமாதிரி எண்ணி அரண்டு படை ஏற்பாடுகளைத் தயார் செய்யும் முனைப்பு தெற்கே உண்டாகிவிட்டது என்று அறிந்துகொள்ள முடிகிறது. இதே போல் கரவந்தபுரத்துக்கும் அரண்மனைக்கும் நடக்கும் செய்தித் தொடர்புகளைக் கண்காணித்தோ, கைப்பற்றியோ அனுப்பு வேண்டுமென்று நம் ஆட்களுக்குக் கூறி அனுப்பியிருக்கிறேன், சாமர்த்தியமும் திறமையும் போதாத காரணத்தினால், நம் ஆட்களில் சிலர் அகப்பட்டு விட்டனர். அவர்கள் கரவந்தபுரத்துச் சிறைச்சாலையில் சிக்கி விழித்துக்கொண்டிருக்கிறார்களாம்.” -

“புலி வருகிறது, புலி வருகிறதென்று பயமுறுத்திக் கொண்டிருப்பதனால் மட்டும் நமக்கு பயன் என்ன ? படையெடுத்துப் போய்விட வேண்டும்.”

பேசுவதற்குக் கூச்சப்படுகிறவனைப் போலப் பேசாமல் உட்கார்ந்திருந்த கண்டன் அமுதன் மேற்கண்டவாறு உடனே படையெடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினான்.

“நிதானமாக செய்வோம். இன்று ஒரு நாளில் செய்துவிட முடிகிற முடிவில்லை இது. இங்கே கொடும்பாளூரிலேயே தங்கி இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆலோசனை செய்து முடிவுக்கு வருவோம். அதற்குள், நமக்கு ஏதாகிலும் நம்பிக்கையூட்டும் புதிய செய்திகள் தெற்கேயிருந்து கிடைத்தாலும் கிடைக்கலாம். சோழன் விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்லிச் சமாளித்தான். அதன்பின் சோழனும், கொடும்பாளூர் மன்னனும் சிறிது தொலைவு தள்ளிப்போய் நின்று தனியாகத் தங்களுக்குள் ஏதோ