பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


முடிந்தது. தடுப்பதற்கு அவர்கள் யார்? எல்லாப் பெருமையும் உள்ளவள், இல்லாதவளைப்போல் போக விரும்பும்போது யார்தான் அதைத் தடுத்து நிறுத்த முடியும்?

அது நன்றாகப் பட்டுத் திரையிட்டு மூடப்பெற்ற சிவிகை யாதலால் சுசீந்திரத்தை அடைகிறவரையில் அதில் மகாராணி வானவன்மாதேவியார் போகின்றார் என்ற பெரிய உண்மை இடைவழி ஊர்களில் இருந்த மக்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. தெரிந்திருந்தால் எவ்வளவு பெரிய கோலாகலமான வரவேற்புகள் கிடைத்திருக்கும்? எத்தனை ஆரவாரமும் மக்கட் கூட்டமும் சிவிகையின் இருபுறமும் நிரம்பி வழிந்திருக்கும்? அந்த மாதிரிச் சாலைகளில் எத்தனையோ செல்வக்குடும்பத்துப் பெண்கள் அந்த மாதிரிப் பல்லக்குகளில் போவது வழக்கம். அதுபோல் நினைத்துக்கொண்டு அதை விசேடமாகக் கவனிக்கவில்லை மக்கள். சிவிகை சுமந்துசெல்வோருக்கும் கூறக்கூடாது என்று முன்னெச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. .

தானுமாலய விண்ணகரத்தின் கோபுரவாயிலில் மகாராணியும், புவனமோகினியும் இறங்கிக் கொண்டார்கள். கோயில் முன்புறமும், உள்ளேயும் கூட்டம் அதிமாக இருந்தது. “தேவி! இன்றைக்கு இந்தக் கோயிலில் உள்ள தெய்வ நீதி மண்டபத்தில் எதோ ஒரு முக்கியமான வழக்கில் தீர்ப்புக் கூறி கைமுக்குத் தண்டனை நிறைவேற்றப் போகிறார்களாம். இவ்வளவு கூட்டமும் கைமுக்குத் தண்டனையைக் காண்பதற்குக் கூடியிருக்கிறது’ என்று புவனமோகினி விசாரித்துக் கொண்டு வந்து கூறினாள் சாதாரண உடையில் சாதாரணப் பெண்கள்போல் கூட்டத்துக்குள் புகுந்து சென்ற அவர்கள் யாருடைய பார்வைக்கும் படாமல் தப்பியது வியப்புதான். -

“புவனமோகினி! இந்தக் கோயிலுக்கு வந்தால் மட்டும் - ஒரு சிறப்பு. இங்கே படைத்துக் காத்து அழிக்கும் முப்பெருங்கடவுளரின் ஒன்றுபட்ட அம்சத்தைத் தெய்வமாக வணங்குகிறோம்'-மகாராணி வண்ண மகளிடம்