பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

395


பெண் மறுபடியும் கேட்டாள். அவள் குரல் பணிவோடு குழைந்து ஏங்கியது.

“பெண்ணே! நான் யார் என்பதை நீ தெரிந்துகொள் வதைவிடத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. ஆனால் ஒன்றுமட்டும் நான் உனக்குச் சொல்ல முடியும். நானும் உன்னைப்போல் ஒரு துர்பாக்கியவதி, கொஞ்சம் அதிகமான புகழும் பெருமையும் உள்ள துர்ப்பாக்கியவதி. வேறுபாடு அவ்வளவுதான். உன்னைப் போலவே பிள்ளையைப் பெற்றதால் தொல்லையை அடைந்து கொண்டிருக்கும் தாய்தான் நானும். இதைத் தவிர வேறு என்ன நான் உனக்குச் சொல்லவேண்டும்?”

சொல்லிவிட்டுப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே அந்தப் பெண்ணின் கண்களைக் கூர்ந்து பார்த்தார் மகாராணி. அவைகளில் ஏமாற்றம் தேங்கிப் பதிந்திருந்தது.

‘நான் வருகிறேன். ஆத்திரத்தால் உங்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசியிருந்தால் என்னை மன்னித்து மறந்து விடுங்கள்!” அந்தப் பெண் மகாராணியிடம் விடை பெற்றுக்கொண்டு வந்த விழியே திரும்பிக் கைமுக்குத் தண்டனை நடக்கும் மண்டபத்தை நோக்கி நடக்கலானாள். “உன்னை மன்னித்துவிடுகிறேன். ஆனால் மறந்துவிடச் சொல்கிறாயே, அதுமட்டும் என்னால் முடியவே முடியாது. உன்னை என்றுமே நான் மறக்கமாட்டேன்.”

மகாராணியின் இந்தச் சொற்கள் வேகமாக நடந்து சென்று அவள் செவிகளில் விழுந்தனவோ, இல்லையோ? அவள். திரும்பிப் பாராமல் வேகமாக நடந்து சென்று கூட்டத்தில் கலந்துவிட்டாள். -

புவனமோகினியும், அர்ச்சகரும் மகாராணி வானவன் மாதேவிக்கு அருகில் நெருங்கி வந்தார்கள்.

“தேவி! அந்தப் பெண்ணிடம் தாங்கள் இன்னாரென்ற உண்மையைக் கூறாததே நல்லதாயிற்று. கூறியிருந்தால் உங்கள் கால்களைப் பிடித்துக்கொண்டு தன் மகனைக் காப்பாற்றுமாறு கெஞ்சியிருப்பாள்” என்றார் அர்ச்சகர்.