பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


காவலன் சிறிது நாணமுற்றுத் தலைகுனிந்து நின்றான். சேந்தன் விலாவிறச் சிரித்தான். அந்தச் சிரிப்பால் காவற்காரன் பொறுமையிழந்தான்.

“ஏன் ஐயா! சும்மா விழுந்து விழுந்து சிரிக்கிறாய்? ஆனாலும் மனிதன் உன்னைப்போல் இப்படிப் பருமனாக இருக்கக்கூடாது. உனக்கு ஒரு விஷயம் எச்சரிக்கை செய்து வைக்கிறேன். கேட்டுக்கொண்டு பேசாமல் போய்ச் சேர். குதிரை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக யவன வணிகர்கள் சேர நாட்டு யானைக்குட்டிகளை ஏற்றுமதி செய்துகொண்டு போகவேண்டுமென்று நெடு நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘யானைக்குட்டி பருமனாகக் குட்டையாக இருக்கும் என்பதைத் தவிர அவர்களுக்கு அதைப்பற்றி வேறு விவரம் தெரியாது. நீ எங்கேயாவது தப்பித் தவறி யவனக் கப்பல்களுக்குப் பக்கமாகப் போய் நின்று தொலைக்காதே. யானைக்குட்டி பார்க்காத யவனர்கள் ‘இதுதான் யானைக்குட்டி என்று உன் முதுகில் மகரமுத்திரை குத்தச் சொல்லிக் கப்பலில் தூக்கிப் போட்டுக்கொண்டு போய்விடப் போகிறார்கள் என்று சுடச் சுடச் சேந்தனைப் பதிலுக்குக் கேலி செய்து தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டான் அந்தக் காவலன். -

இந்தச் சமயத்தில் பல்லக்கிலிருந்து இறங்கிய குழல்வாய்மொழி சேந்தனைக் கைதட்டிக் கூப்பிடவே, நாராயணன் சேந்தன் அந்தக் காவலனோடு வம்பளப்பதை நிறுத்திக் கொண்டு விரைந்து நடந்தான்.

“அம்மணி! வாருங்கள், நேரமாக்கி விட்டீர்களே? நான் அப்போதிருந்து. உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். சிவிகையை இன்னும் விரைவாகக் கொண்டு வரச்சொல்லி ஆட்களை விரைவு. படுத்தி வந்திருக்கலாம் நீங்கள்” என்று குழல்வாய்மொழியின் அருகில் சென்று சேந்தன் அடக்க ஒடுக்கமாகக் கூறினான்.

“சுமப்பவர்களும் மனிதர்கள்தானே ? அவர்களை அடித்தா துரத்த முடியும்?. சரி! நீங்கள் முன்னால் வந்து.