பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

415


சீவல்லபன் நாணித் தலை குனிந்தான். அவனால் முடியவில்லை.

“நீ தோற்றாய்” என்று சொல்லிவிட்டு அடுத்த வீரனைக் கேட்டார் அவர்! அவன் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் ஏதோ உளறினான்.

“சே சுகமில்லையே? உங்களில் ஒருவருக்குக் கூட அழகாகப் பொய் சொல்லத் தெரியவில்லையே?’ என்று உதட்டைப் பிதுக்கினார் மகாமண்டலேசுவரர். அப்போது அந்த வீரர்களில் கோமாளி போன்ற முக அமைப்பும் கோணிய வாயும் நீளமான மூக்குமுள்ள ஒரு வீரன் முன் வந்தான். .

“நான் சொல்லுகிறேன் ஒரு பொய்!” “எங்கே சொல் பார்க்கலாம்!” அவன் சிரித்துவிடாமல் சொன்னான்; “என்னைப் பெற்ற அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணமாகும் போது நான் சிறு பையனாயிருந்தேன். அப்பா அம்மாவுக்குத் தாலி கட்டுகிற போது நான் அம்மாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு பக்கத்தில் வைத்திருந்த உலக்கையின் கொழுந்தை கிள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஊர்வலத்துக்குக் கொம்புள்ள குதிரை ஒன்றாவது கிடைக்கவில்லையே என்று எல்லோரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் உடனே ஒடிப்போய்த் தெருக்கோடியிலிருந்த மலடியின் எட்டாவது மகனிடம் சொல்லிக் கொம்புள்ள குதிரைக்கு ஏற்பாடு செய்தேன்.” -

“அபாரம்: அற்புதம்! இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து இதே திறமையோடு இந்த தமிழ்நாட்டில் நீ பிறந்தால் அந்தக் காலத்துக்கே நீதான் மகாகவியாக இலங்குவாய். என்ன அருமையான பொய்!” மக்ா மண்டலேசுவரர் கூறினார். அவரும் மற்றவர்களும் நெடுநேரம் அடக்கமுடியாமல் வயிறு குலுங்கச் சிரித்தார்கள். சிரிப்பு முடிந்ததும் மகாமண்டலேசுவரரின் கண் பார்வை சீவல்லபமாறனுக்குக் கட்டளையிட்டது. அவன் அந்த வீரர்களை அவர்களிடம் ஒப்பித்த காரியத்தைச் செய்யப் புறப்படுமாறு ஆணையிட்டான்.