பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

419


இரண்டு கைகளும் மேல் எழுப்பிக் கைகூப்பி வணங்குவதற்குத் தயாராகிவிட்டாள்.

ஆகா! எவ்வளவு விந்தையான பரந்த மனம் இவருக்கு வாய்த்திருக்கிறது? உலகத்தில் முக்கால்வாசிப் பேருக்கும் தங்கள் சொந்தத் துன்பத்தை எண்ணி வருந்துவதற்கே நேர மில்லை. கால்வாசிப் பேருக்குத் துன்பங்களே நிரந்தரமாகப் பழகிவிட்டதால் அவற்றையே இன்பங்களாக எண்ணிச் சிரித்துக்கொண்டே வாழப் பழகி விட்டார்கள். கண்களின் பார்வைக்கு இவர் பாண்டிமாதேவி மட்டும்தான். கருணையின் பார்வையில் இவர் உலகமாதேவி! நாட்டையும், மகனையும் கண்ணிரையும் அடக்கிக் காக்க முடியாத சூழ்நிலை. உலகத்தையே துன்பமின்றிக் காக்க வேண்டுமென்ற ஆவல், உண்மைக்காக அழுது உயர உயரப் போகும் உலகளாவிய மனம், இந்த மனம்?. இது மனிதப் பெண்ணின் மனமில்லை! தெய்வப் பெண்ணின் மனத்தோடும் மனிதத் தாயின் உடலோடும் அந்தச் சமயத்தில் புவனமோகினியின் கண்களுக்குத் தோன்றினார் மகாராணி,

“தாயே! உணவைக்கூட முடித்துக் கொள்ளாமல் அரண்மனையிலிருந்து கிளம்பினர்கள். சுசீந்திரத்திலிருந்து நேரே அரண்மனைக்கே திரும்பிவிடலாமென்று எண்ணி யிருந்தேன். தாங்களோ திடீரென்று காந்தளூர் மணியம்பலத்துக்குப் புறப்பட்டு விட்டீர்கள்” என்று வண்ணமகள் கவலையோடு வினவினாள்.

‘உணவுக்கென்ன? எங்கும் கிடைக்கக்கூடியதுதான். நிம்மதியை அல்லவா நான் தேடிக்கொண்டு போகின்றேன். திரும்பத் திரும்பக் கூட்டுக்குள் அடைபடும் பறவையைப் போல் மறுபடியும் நான் அரண்மனைக்குள் போய் அடைபட்டுக் கொண்டிருக்க என் மனம் ஒப்பமாட்டேன் என்கிறதே! ஆசிரியர், பவழக்கனிவாயர் போன்றவர்கள் அரண்மனையில் வந்து தங்கியிருந்தார்கள். அவர்களும் திரும்பிச் சென்று விட்டார்கள். என்னோடு உடன் இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண் விலாசினி. அவளும் திடீரென்று தந்தையோடு புறப்பட்டுப் போய்விட்டாளே, வல்லாளதேவனின் தங்கைக்கு