பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

451


சோழன் முகத்தில் கடுமை படர்ந்தது. குரலில் கண்டிப்பு ஏறியது. நீங்கள் வந்த வரலாற்றை விவரிக்கச் சொல்லி, இப்போது உங்களைக் கேட்கவில்லை. எந்தக் காரியத்தைச் செய்வதற்காகக் கடல் கடந்து போய் இத்தனை நாட்கள் சுற்றினர்களோ, அந்தக் காரியம் என்ன ஆயிற்று? அதை முதலில் சொல்லுங்கள். உங்களுடைய குனிந்த தலைகளும் பயந்த பார்வையும் நல்ல விடை கிடைக்குமென்று எனக்குச் சிறிதும் நம்பிக்கையூட்டவில்லையே?”

சோழனுடைய கேள்விக்கு அந்த மூன்று பேருமே பதில் கூறவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு சொல்லத் தயங்கி நின்றனர்.

“என்னடா! ஒருவருக்கொருவர் பார்த்துத் திருட்டு விழிவிழித்துக் கொண்டு நிற்கிறீர்கள்! எனக்குத் தெரியுமே! நீங்கள் போன காரியத்தைக் கோட்டை விட்டுவிட்டுத்தான் வந்திருக்கிறீர்கள். உங்கள் நெற்றியில் தோல்விக் களை பதிந்து போய்க் கிடப்பதைப் பார்த்தாலே தெரிகிறேதே?” என்று தன் முரட்டுக் குரலை உரத்த ஒலியில் எழுப்பி, அவர்களை விரட்டினான் கொடும்பாளுரான். அவர்கள் தலைகள் இன்னும் தாழ்ந்தன.

“என்ன நெஞ்சழுத்தம் இந்தப் பயல்களுக்கு! நான் கேட்கிறேன். பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டு ஊமை நாடகம் நடிக்கிறார்களே!” என்று முன்னினும் உரத்த குரலில் கூப்பாடு போட்டுக்கொண்டு புலி பாய்ந்து வருவதுபோல் அவர்கள் அருகே பாய்ந்து வந்தான் கொடும்பாளுர் மன்னன். கடுங்குளிரில் உதறல் எடுத்து நடுங்கும் மணிப்புறாவைப் போல் அந்த மூன்று பேருடைய உடல்களும் பயந்தால் நடுங்கின.

“குமாரபாண்டியனைத் தேடிக் கண்டுபிடித்துக்

கொன்றீர்களா, இல்லையா? வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? பதில் சொல்லேன்.’-இவ்வாறு ஆத்திரத்தோடு கத்திக்கொண்டே முன்னால் பாய்ந்து வந்த