பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

470

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


பெண்களுக்கு வேண்டும். சிறிய ஆசைகளில் மனம் வைத்துவிட்டால் நினைவுகளுக்கு ஆற்றலே உண்டாவதில்லை. நீயும் நானும் இவளைக் கண்டிப்பதை இன்றோடு விட்டுவிட வேண்டும். இவ்வளவு வயது வந்த பெண்ணைக் கண்டிப்பதும் அநாகரிகமானது. இவளுடைய நினைவுகளே இவளுக்கு விளைவு கற்பிக்கட்டுமென்று விட்டு விடுவது தான் நல்லது.” ஒன்றிலும் பட்டுக் கொள்ளாதவர்போல், தன் தங்கையிடம் கூறிய அவர் மதிவதனியின் பக்கமாகத் திரும்பி, “மதிவதனி! நீ ஏன் அழுகிறாய்? நீ இன்னும் குழந்தையில்லையே? தாயைத் தவிர வேறு நினைவில்லாதவரை பெண் பேதையாயிருக்கிறாள். தந்தை, உடன்பிறந்தோர், விளையாட்டுப் பொருள்-எல்லாவற்றையும் கடந்து தன்னைத் தவிர இன்னொரு ஆண்மகனை நினைக்கத் தொடங்கும்போது பேதை முழுமைபெற்ற பெண்ணாகி விடுகிறாள். இப்போது நீ ஒரு பெண். உன் நினைவுக்கு நீ ஓர் ஆண்மகனைத் தேடிக்கொண்டுவிட்டாய். அந்த நினைவுக்கு ஆற்றலைத் தேடி உறுதியாக்கு.அதுதான் நான் உனக்குக் கூறும் அறிவுரை. இனிமேல் நான் உன்னைக் கண்டிக்கப் போவதில்லை, பயமுறுத்தப்போவதில்லை. அந்த இளைஞன் உன்னை மறந்துவிடுவானென்று சொல்லிக் கலக்கமடையச் செய்யும் வழக்கத்தையும் இந்த விநாடியிலிருந்து நான் விட்டுவிடுகிறேன்” என்றார். “ . . . . - - -

தந்தையின் அந்தப் பேச்சைக் கேட்டவுடன் மதிவதனிக்கு உடல் சிலிர்த்தது. தை மாதத்து வைகறையில் கடலில் நீராடினதுபோல் இருந்தது.

“அப்பா!’ என்று உணர்ச்சி மேலிட்டுக் கூவிக்கொண்டே எழுந்து ஓடிவந்து அவர் காலடியில் சுருண்டு விழுந்தாள் அவள். “நினைவை உறுதியாக்கு நினைப்பதை அடைவது ஒரு தவம்” என்ற சொற்கள் அவள் செவிகளை விட்டு நீங்காமல் நித்திய ஒலியாகச் சுழன்றுகொண்டிருந்தன. தன் எண்ணத்தின் இலட்சியமான காதலில் வெற்றிபெற ஒரு புதிய கருவி கிடைத்துவிட்டது. அவனை அடைவதற்கு அவளுக்கு ஒரு புதிய உண்மையை அவள் தந்தை கூறிவிட்டார். . s'