பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


மெல்ல எழுந்திருக்கச் செய்து நடத்திக் கூட்டிக் கொண்டு போய்க் காண்பித்தார். குழந்தை ஆச்சரியத்தோடு பார்ப்பதுபோல் முடியையும், வாளையும், சிம்மாசனத்தையும் திரும்பத் திரும்பத் தொட்டுப் பார்த்தான் இராசசிம்மன். அந்த அறையிலிருந்து வெளிவந்ததும், “என்னை உடனே மேல் தளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனால்தான் ஆயிற்று!” என்று முரண்டு பிடித்தான். அந்தத் திறந்த வெளிக் காற்று காய்ச்சல் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது என்று அவர் எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார். அவன் கேட்கவில்லை, மேல் தளத்தில் கூட்டிக்கொண்டுபோய் நிறுத்தினார். மேலே மால்ைநேரத்து வானின் செம்பொன்னிறச் செம்முகில்கள் ஆகாயவெளியைத் தகத்தகாயம் செய்து கோலமிட்டிருந்தன. வானின் பிறைச்சந்திரனை எட்டிப் பிடித்துவிடுவதுபோல் அலைக் கைகளை மேல் எழுப்பியது நீலக் கடல், இராசசிம்மன் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு விழிகளை இமைக்காமல், கடலையும், வானவெளியையும், நாற்புறத்திலும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். அந்த வானில் கடலில், அலைகளில், மேகங்களில், பிறைச்சந்திரனில் அவன் எதைக் கண்டானோ? “சக்கசேனாபதி கீழே போய் அந்த வலம்புரிச் சங்கை எடுத்து வாருங்கள்” என்றான். அவர் கீழே சென்றார். திரும்பிய பக்கமெல்லாம் செம்பவழத் தீவில் சந்தித்த அந்த அழகியின் முகமே தெரிவதுபோலிருந்தது இராசசிம்மனுக்கு. அந்த அற்புதமான இயற்கையின் சூழல் அவனை என்னவோ செய்தது. அவனுடைய நாவின் நுனியின் சில சொற்கள் துடித்தன. அவன் உள்ளம் ஏதோ ஒன்றை உணர்ந்து எதையோ அழகாக வெளியிடக் கிளர்ந்து, அடுத்தவிநாடி அவன் பாடத் தொடங்கினான். அலை ஓசையை இடையிட்டு அவன் இனிய குரல் ஒலித்தது. அந்த இனிமையில் மதிவதனியின் ...நினைவு அவனுள் சுழன்றது. -

“மின்னலின் ஒளியெடுத்து முகில்தனில்

குழல் தொடுத்துப் பொன்னில் நிறம்படைத்துப்

பிறையினில் நுதல் மடுத்துப்