பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

483


இருந்துவிட்டதனால் உங்களுக்கு என்ன குடி முழுகிவிடப் போகிறது? என்னால் உங்களுக்கு என்ன கெடுதல் வந்துவிடப் போகிறது:”

“இரண்டு பேர்கள் போகிறோம். அல்லது வெறுங்கப்பலை ஒட்டிக் கொண்டு போகிறார்கள். அதைப்பற்றிக் கேட்க நீ யார் தம்பீ? உனக்கு இடமில்லையென்றால் பேசாமல் போக வேண்டியதுதானே? இந்தக் குறுக்குக் கேள்வியெல்லாம் உன்னை யார் கேட்கச் சொன்னார்கள்” என்றான் நாராயணன் சேந்தன். தொடக்கத்தில் சேந்தனிடம் எரிந்து பேசி வம்பு செய்த அந்த வாலிபனின் முகத்தில் இப்போது சிறிது கலவரமும் பதற்றமும் தோன்றின. “சகோதரி! என்னை உங்கள் கூடப் பிறந்த தம்பிபோல் நினைத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு நெகிழ்ந்த மனமும் பிறருக்கு விட்டுக் கொடுத்து இரங்கும் பண்பும் அதிகம் என்பார்கள். நீங்களோ இப்படிப் பாராமுகமாக இருக்கிறீர்களே. இப்படி நடுக்கடலில் வைத்துக்கொண்டு, ‘உன்னைப் பிடித்துக் கடலில் தள்ளிவிடுவேன்’ என்று பயமுறுத்தினால் நான் என்ன செய்வேன்? இந்த மனிதரிடம் கொஞ்சம் நீங்கள் எனக்காகச் சொல்லுங்கள். இந்தப் பிரயாணத்தின்போது நடுநடுவே நான் உங்களுக்கு எவ்வளவோ உதவியாக இருப்பேன். நான் உங்கள் மனிதன், உங்கள் ஊழியனைப் போல் நினைத்துக் கொள்ளுங்கள்.” .

அந்த வாலிபனுடைய திடீர்ப் பணிவைக் கண்டு குழல்வாய்மொழி சிரித்தாள். சேந்தன் ஏளனம் நிறைந்த குரலில், “கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது என்கிற விவகாரம் வைத்துக்கொள்ளாதே. சிறிது நேரத்துக்கு முன்னால் அசகாயகுரனைப் போல் வாளை உருவத் தயாராகி விட்டாய். இப்போது என்னடாவென்றல் சரணாகதி நாடகம் போடுகிறாய். நான் உன்னை இதுவரை ஒன்றுமே செய்யாமல் நின்று பேசிக்கொண்டிருப்பதனால் தான் நீ எனக்குப் பயப்பட மாட்டேனென்கிறாய். கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி. இரு இரு இப்போதே ஆட்களைக் கூப்பிட்டு உன்னைக் கடலில் துக்கி எறியச் சொல்லுகிறேன்” என்று. சொல்லிக்கொண்டே ஆட்களைக் கூப்பிடுவதற்காகக் கைகளைச்