பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

490

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்


“குழைக்காதரே! இரகசியமான செய்திகளைப் பொதுவான இடங்களில் பேசுவது காய்ந்த வைக்கோற்போரில் நெருப்பைப் பத்திரப்படுத்திவைக்க முயல்வதுபோல மடமையான செயல். சில சந்தர்ப்பங்கள் நம்மைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டுவிடும். அதனால்தான் இவ்வளவு முன்னெச்சரிக்கை. சரி. நீங்கள் போன காரியம் என்ன ஆயிற்று? அதைப் பற்றிச் சொல்லுங்கள்.”

“ஆவது என்ன? இந்த விநாடி வரை எல்லாம் சரியாகத்தான் நடைபெற்றிருக்கின்றன. இனிமேல் எப்படியோ? காரியத்தை முடித்துக்கொண்டு வெற்றியை நம்முடையதாக்கிக் கொண்டு வரவேண்டிய திறமை தங்களுடைய திருத் தங்கையாரின் கைகளில் இருக்கிறது.”

“நீங்கள் எதுவரை உடன் சென்றிருந்தீர்கள்?”

"விழிஞம் வரை நானும் கூடப் போயிருந்தேன். அவர்களுடைய கப்பலில் தங்கள் தங்கையார் ஏறிக்கொள்கிற வரை மறைந்திருந்து பார்த்துவிட்டுத்தான் திரும்பினேன்.”

"தங்கள் கப்பலில் ஏறக்கூடாதென்று அவர்கள் மறுக்கவில்லையா?”

“மறுக்கவில்லையாவது? அவர்களாவது மறுக்காமல் விடுவதாவது மகாமண்டலேசுவரருக்கு மதியமைச்சன் போல் திரிகிறானே அந்தக் குட்டையன், அவன் தங்கையாருக்கு இடமி ல்லை என்று கடைசி வரையில் சாதித்து விட்டான்.”

“அடடே! அப்புறம் எப்படி இடம் கிடைத்தது?”

“நேர்மையாக இடம் கிடைக்கவே இல்லை. அவர்கள் பார்க்காத நேரத்தில் தங்கள் தங்கையார் கப்பலின் கீழ்த்தளத்தில் ஏறி ஒளிந்துகொண்டு விட்டார்கள். கப்பல் புறப்படுகிறவரை நான் மறைந்திருந்து பார்த்துவிட்டுத்தான் வந்தேன். விழிஞத்தில் புறப்பட்டவன் நேரே இங்கே குதிரையை விரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்.”

“குழைக்காதரே! என் தங்கையின் ஆண் வேடத்தைப் பார்த்து மகிழும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமற் போய்