பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

513


ஆரம்பித்தவர்கள் படகு நடு ஆற்றைக் கடப்பதற்கு முன்பே அக்கரையை அடைந்து விட்டார்கள்.

“மகாமண்டலேசுவரரையும், அவருடைய சாமர்த்திய சாலியான அந்தரங்க ஒற்றனையுமே கண்களில் விரல்விட்டு ஆட்டி ஏமாற்றியிருக்கிறேன் நான். கேவலம், இந்த இடையாற்றுமங்கலத்தில் வேலைப் பிடித்துக் கொண்டு நிற்கும் நாலைந்து யவனக் காவல் நாய் களா என்னைப் பிடித்துவிடப்போகின்றன? நீ சும்மா பயப்படாமல் படகை ஒட்டிக் கொண்டு போ, அப்பா!’ என்று படகோட்டிக்குத் தைரியமூட்டிக் கொண்டிருந்தான் குழைக்காதன். அவனுடைய அந்த இருமாப்பான பேச்சின் ஒலி அடங்குவதற்கு முன் இருப்புறமும் நெருங்கி வந்த ஆபத்துக்கள் அவன் ஆணவத்தை அடக்கி முற்றுப்புள்ளி வைத்தன. சற்றுமுன் அவனால் நாய்கள் என்று வருணிக்கப்பட்ட இடையாற்றுமங்கலம் மாளிகையைச் சேர்ந்த யவனர் காவல் வீரர்கள் வலது பக்கத்திலும், இடது . பக்கத்திலுமாக இரண்டு படகுகளில் வேகமாக வளைத்துக் கொண்டு அவனது ஆயுதங்கள் நிறைந்த படகை அணுகிக் கொண்டிருந்தனர். ஆபத்துதவிகள் தலைவன் தன்னை நெருங்கும் ஆபத்தை எண்ணி மலைத்தான். படகை வேகமாக ஒட்டிக் கொண்டு கரைக்குப் போய்விட முடியாமல் பாரம் தடுத்தது. அகப்பட்டுக் கொண்டாலோ அதைவிடக் கேவலம் வேறு இல்லை. அவனுக்கு மட்டும்.கேவலமில்லை. அவனால் தளபதியின் பெயருக்கும் கேவலம், அவன் திகைத்தான். கள்ளிப்பழம் போல் சிவந்து கொடுமை குடியிருக்கும் அவன் கண்கள் கொடுரமாக உருண்டு புரண்டு விழித்தன. ஏற்கெனவே கடுமையான முகத்தில் கொடுமை வெறி கூத்தாடியது, அடுத்த கணம் முன்புறம் பார்த்துப் படகைச் செலுத்திக் கொண்டிருந்த படகோட்டியின் முதுகுக்குமேல் பிடரியைத் தன் இரும்புக் கரங்களால் பிடித்துத் தலைக்குப்புறத் தண்ணிரில் தள்ளினான். படகோட்டியின் அலறல் தண்ணிர் ஒசையில் சிறிதாக மங்கி விட்டது. படகின் ஒரு மூலையைக் காலால் ஓங்கி மிதித்து அது கவிழத் தொடங்கியதும் தண்ணீரில் பாய்ந்து மூழ்கினான் குழைக்காதன்.

பா.தே.33