பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

நா. பார்த்தசாரதி 545

மகாமண்டலேசுவரரிடம் விடைபெற்றுக் கொண்டு இடையாற்றுமங்கலம் திரும்பிய படகோட்டி அம்பலவன் வேளான் உடனே பறளியாற்றில் மூழ்கிய ஆயுதங்களை வெளியேற்ற ஏற்பாடு செய்தான். அவைகளை முறையாக வெளியேற்றி ஒழுங்குபடுத்த இரண்டு நாட்கள் ஆயின. அவனுக்கு. மறுநாளே ஆயுதங்களையும், மகாமண்டலேசுவரர் தளபதிக்கென்று கொடுத்து அனுப்பிய ஒலையையும் கோட்டாற்றுப் படைத் தளத்தில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டான் அவன். அவருடைய கட்டளைப்படியே தளபதியிடம் அதிகம் பேசாமல் ஆயுதங்களை அளித்த கையோடு ஒலையையும் அளித்து விட்டுத் திரும்பினான் அம்பலவன்வேளான்.

‘குழைக்காதன் கடத்திக்கொண்டுவர முயன்று முடியாமற் போய்ப் பறளியாற்றில் கவிழ்க்கப்பட்ட ஆயுதங்களை மகாமண்டலேசுவரரே சிரத்தையாக எடுத்துத் தனக்கு அனுப்பிய நோக்கமென்ன?- என்று புரியாமல் பயமும் திகைப்பும் கொண்டு, அவர் தனக்குக் கொடுத்தனுப்பியிருந்த ஒலையைப் பிரித்தான் தளபதி.

‘அன்புள்ள தளபதி வல்லாளதேவனுக்கு, இடையாற்றுமங்கலம் நம்பி எழுதும் திருமுகம். இடையாற்று மங்கலம் நிலவறையிலிருந்த ஆயுதங்களை இரகசியமாகக் கடத்திக்கொண்டு போவதற்காகக் குழைக்காதன் மூலம் நீ இவ்வளவு பெரிய காரியங்கள் செய்திருக்க வேண்டாம். உனக்கு அவற்றில் விருப்பம் இருப்பதாக எனக்கு ஒரு வார்த்தை தெரிவித்திருந்தால் நானே மூட்டைகட்டி உனக்கு அனுப்பியிருப்பேன். என்னுடைய பலம் கேவலம் அந்த வாள்களின் துணிகளில் அடங்கியிருப்பதாக நீ

கணக்கிட்டிருந்தால் அது தப்புக்கணக்கு என்பதை

இப்போதாவது உணர்ந்துகொள். வாளும், வேலும் எதிரிகளைத் தேடிச் சென்று தம் துனியால் குத்த வேண்டும். ஆனால், தளபதி அறிவின் நுனியில் எதிரிகள் தாமாகவே வந்து தங்களைக் குத்திக்கொண்டு மாய்கிறார்கள். இதை உனக்கு இப்போது கூறிவைக்கிறேன். கொள்ளைக் கூட்டத்தார்

ur. Gg. 35