பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

553


கழற்கால் மாறனாருக்குச் செல்வாக்கைக் காட்டிலும் செல்வம் அதிகமாக இருந்தது. ஒளியும் அழகும் நிறைந்து ஊருக்கே தனிக்கவர்ச்சி பூட்டிக்கொண்டிருக்கும் அவருடைய மாளிகைக்கே அந்த ஊரின் பெயரை இட்டுச் சொல்லலாம் போலிருந்தது. அத்தகைய ஒளி நிறைந்த மாளிகையில் கூடி இருள் நிறைந்த எண்ணங்களைச் சிந்தித்தார்கள் கூற்றத் தலைவர்கள்.

“நான் அப்போதே நினைத்தேன்; பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இடையாற்றுமங்கலம் நம்பி நம்முடைய எதிர்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார் என்று முன்பே எனக்குத் தெரியும்” என்று பரிமேலுவந்த பெருமாள் பேச்சைத் தொடங்கினார்.

“அது பெரிய மலை ஐயா! அதைச் சரியவைக்க வேண்டுமானால் பூகம்பத்தைப் ப்ோல் வலிமையான பெரிய எதிர்ப்புக்கள் ஒன்று கூடி வீழ்த்தவேண்டும். நாம் நான்கு பேர்கள் அந்த மலைக்கு முன் எந்த மூலையோ?” என்றார் நன்கணிநாதர்.

“இப்படி வெளிப்படையாக ஒப்புரவு மொழிமாறா ஒலையைக் கொண்டுபோய் மகாராணியாரிடம் கொடுத்து அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தது நமது பெரும் பலவீனம். நாம் யாரை எதிர்க்கிறோமோ, அவருக்கே நம்முடைய எதிர்ப்புத் தெரிந்து விட்டது. இப்படியெல்லாம் வருமென்று தெரிந்திருந்தால் வெளிப்படையாக எதையும் செய்யாமல் மறைமுகமாக எதிர்ப்பு வேலைகளைச் செய்திருக்கலாம் நாம்” என்றார் அழகிய நம்பியார். - .

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே வீற்றிருந்த கழற்கால் மாறனாருக்கு எரிக்சல் எரிச்சலாக வந்தது. மகாமண்டலேசுவரரைப் பற்றி அப்போது யாராவது வாய் ஓயாமல் தூற்றிப் பேசினால் அவருக்கு ஆறுதலாக இருக்கும் போலிருந்தது. ஆனால் எல்லாருமே அவரைத் துற்றுவதாக எண்ணிக் கொண்டு அவருடைய பெருமையை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சினால்தான்