பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


ஏற்பட்டது. யானைகளின் பிளிறல்கள் சிறிது சிறிதாகக் குறைந்து, முடிவில் ஒலியற்று ஒய்ந்தன. மரங்கள் ஆட்டப்படவில்லை; கிளைகள் முறிக்கப்படவில்லை. ஒலி ஓசைகளையெல்லாம் அடக்கிக்கொண்டு நிற்கும் ஒரு பேரமைதி தானாகத் திடீரென்று அந்தக் காட்டின்மேல் கவிழ்வதுபோல் இருந்தது. குமாரபாண்டியன் வியப்புடன் கீழே பார்த்தான். மந்தை மந்தையாகச் சாலையை அடைத்துக் கொண்டு நின்ற யானைக் கூட்டம் மெதுவாக அடங்கி ஒடுங்கி, விலகி, காட்டுக்குள் புகுந்து மறைவது தெரிந்தது. யானைகள் நடந்துபோவதற்குரிய முரட்டுத் தனமும், கூப்பாடும் சிறிதாவது இருக்க வேண்டுமே! இருளில் வாயும், உணர்வுமில்லாத கருங்குன்றுகள் சில எதன்போக்கிலோ கவரப்பட்டு விலகிச் செல்வதுபோல் மெல்ல மறைந்தது யானைக் கூட்டம். புத்த பிட்சுக்கள் அந்த இடத்தை அணுகும்போது சாலை வெறிச்சோடித் தூய்மையாக இருந்தது.

“சக்கசேனாபதி ! இது என்ன விந்தை’ என்று வியப்புமேலிட்ட குரலில் கேட்டான் இராசசிம்மன்.

“விந்தையுமல்ல, தந்திரமுமல்ல! புலன் உணர்வுகளை வென்ற தூய்மைக்கு உயிர்களின் மரியாதை! அன்பும், கருணையும் நிறைந்த குரல்கள் ஆயிரக்கணக்கில் ஒலிக்கும்போது அந்த ஒலி வெள்ளத்தில் மிருகத்தன்மை தேய்ந்து நெகிழ்ந்துவிடுகிறது. தவத்துக்கு மட்டுமே உள்ள வலிமை இது.”

“ஆச்சரியமான நிகழ்ச்சிதான்!”

“இப்போதே நாமும் கீழே இறங்கி இந்தப் புத்தபிட்சுக் களைத் தொடர்ந்தே அனுராதபுரம் போய்விடுவது நல்லது. இவர்கள் கூட அரசருடைய நாண்மங்கலத்துக்காக அனுராதபுரம் போகிறவர்களாகத்தான் இருக்கவேண்டும். வாருங்கள், இறங்கி விசாரிக்கலாம்” என்று சக்கசேனாபதியும், இராசசிம்மனும் கீழே இறங்கினார்கள். அவர்களுடைய குதிரைகள் மரத்தின் கீழிலிருந்து சிறிது தொலைவு தள்ளி மூலைக்கொன்றாக நின்றுகொண்டிருந்தன. புத்தபிட்சுக்கள்