பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


இருவரும் எதையெதையோ ஒளிவு மறைவின்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். எனக்கு என்னவோ தொடக்கத்திலிருந்தே இவன் மேல் நம்பிக்கையில்லை” என்று மெல்லச் சொன்னான். “கூத்தா! இப்போது இங்கே உனக்கு ஒரு காரியமும் இல்லை. நீ மேல் தளத்தில் போய் இரு உன் உதவி எதற்காவது தேவையானால் நான் உன்னைக் கூப்பிடுகிறேன்” என்று குழல் வாய்மொழி அவனுக்குக் கட்டளையிட்டாள். கூத்தன் அந்த இடத்திலிருந்து மேல் தளத்துக்குப் போக மனமில்லாதவனைப் போல் தயங்கித் தயங்கி நடந்து படியேறிச் சென்றான்.

“அம்மணி! இந்தப் பிள்ளையாண்டானால் நமக்குக் கெடுதல்கள்தான் வருமே ஒழிய நன்மையில்லை என்று என் மனத்தில் ஏதோ குறளி சொல்கிறது. நம்மை ஏமாற்றக் கூடிய மர்மமான அம்சம் ஏதோ ஒன்று இவனிடம் இருக்கிறது. நீங்கள் மட்டும் ஒரு வார்த்தை சரி என்று சொல்லி விட்டால் நாளைக்கே நடுவழியில் ஏதாவது ஒரு தீவில் இவனை இறக்கி விட்டுவிடுவேன். இவன் நம்மோடு இலங்கை வரை வந்து இறங்குவதில் எனக்குச் சம்மதமே இல்லை. நாம் போகிற காரியத்தின் இரகசியம் இவனால் வெளியாகவும் கூடும்” என்று சேந்தன் சொன்னபோது அதற்கு இணங்கி விடலாமா, வேண்டாமா என்று குழல்வாய்மொழி மனப் போராட்டத்துக் கிடமானாள். அந்தச் சமயத்தில் மேல் தளத்துக்கு ஏறுகிற படியின் திருப்பத்தில் அடக்கிக் கொள்ள முடியாமல் யாரோ தும்முகிற ஒலி கேட்க சேந்தன் விரைவாக நடந்து போய்ப் பார்த்தான். கூத்தன் அந்த இடத்திலேயே திருப்பத்தின் முதல் படியில் நின்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், சேந்தனுக்குக் கோபம் அளவின்றிப் பொங்கியது.

“பொட்டைப் பயலே ! ஒட்டுக் கேட்டுக்கொண்டா நிற்கிறாய் இங்கே?’ என்று அவன் இரையத் தொடங்கிய போது, தடதடவென்று படியேறி மேலே ஓடினான் கூத்தன். இந்த திகழ்ச்சியைப் பார்த்ததும் குழல்வாய்மொழிக்குக்கூட மனம் மாறிவிட்டது. அந்தப் பிள்ளையின்மேல் அவளுக்கு உண்டாகியிருந்த சிறிது நல்ல எண்ணமும் போய்விட்டது.

“உங்கள் விருப்பம் போலவே கப்பலிலிருந்து இறக்கி விட்டுவிடுங்கள். ஆனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. அந்த