பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 60?

‘கூத்தன் நேரம் எப்போது வாய்க்கப்போகிறதென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சிந்தனை கூர்மை யாகித் தப்பும் வழிகளை ஒவ்வொன்றாகச் சிந்தித்தது. சாத்திய அசாத்தியங்களை ஆராய்ந்தது. சற்றே அதிகமான துணிச்சலும் உண்டாகியிருந்தது. தப்புவதற்காக எப்படிப்பட்ட காரியத்தை வேண்டுமானாலும் செய்வதற்கு உறுதி பூண்டிருந்தான் அவன். நண்பகலில் உச்சி வெயில் கொடுமையாக இருந்தது. கரையிலிருந்த காட்டின் காற்றும், நீரின் குளிர்ச்சியும் அந்த வெம்மையைச் சிறிது தணிக்க முயன்றன. அப்போது கூத்தன் தப்புவதற்கு ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லோரும் உணவு உட்கொண்டு முடிந்து சிறிது நேரம்தான் ஆகியிருந்தது. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு அல்லவா? சேந்தன் மேல்தளத்தில் உட்கார்ந்துகொண்டிருந்த இடத்திலேயே ஒரு பாய்மரக் கம்பத்தில் சாய்ந்துகொண்டு காலை நீட்டிக் கண்ணயர்ந்திருந்தான். குழல்வாய்மொழி கீழ்த்தளத்திலிருந்த தனது அறைக்குள் இருந்தாள். மற்றக் கப்பல் ஊழியர்கள் எல்லோரும் சேந்தனைப் போலவே மேல்தளத்தில் அயர்ந்து போய்க் கிடந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துத் துங்காமல் உட்கார்ந்திருந்த ஆள் கூத்தன் ஒருவன்தான்.

ஒரு திடமான முடிவுடன் அவன் எழுந்தான். ஒசைப் படாமல் அடிமேல் அடிவைத்து மெல்ல நடந்து, கீழ்த்தளத்துக்கு இறங்கிப் போனான். குழல்வாய்மொழியின் அறை திறந்துதான் இருந்தது. கூத்தனுக்கு உடம்பெங்கும் வியர்த்தது. ஒரு கையால் வாளின் துனியைப் பற்றிக் கொண்டே ஒரமாக ஒதுங்கி நின்று மெதுவாகத் தலையை நீட்டி அறைக்குள் எட்டிப் பார்த்தான். குழல்வாய்மொழி படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். கூத்தன் விருட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து கதவை உட்புறத்தில் தாழிட்டுக் கொண்டான். அந்த அறையின் ஒரு மூலையில் இருந்த பெரிய தந்தப்பெட்டியைத் திறந்தான். பெட்டிக்குள் மகாமண்டலேசுவரரின் அருமைக் குமாரிக்குச் சொந்தமான பட்டுப் புடவைகளும், மற்ற அலங்காரப் பொருள்களும் அடுக்கடுக்காக இருந்தன. அவற்றில் ஒரு புடவையும் பட்டுக்கவசமும் எடுத்துக்கொண்டு குழல்வாய் மொழியின் தூக்கம் கலைந்து அவள் எழுந்துவிடாமல் மெதுவாக நடந்து