பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

641


மனிதனுக்கு அறிவின் பலம் அதிகமாக ஆக தன் மேலுள்ள நம்பிக்கையும் சுயபலமும் குறைவனபோல் ஒரு பயம் அந்தரங்கமாக உண்டாவது இயற்கை.

கூற்றத் தலைவர்களின் எதிர்ப்பால் தமக்கு எத்தகைய தொல்லைகள் விளையுமென்பதை மிகக் குறுகிய காலத்திலேயே மகாமண்டலேசுவரர் புரிந்துகொள்ள நேர்ந்தது.

‘குமாரபாண்டியனும் திரும் பிவரவில்லை ! கொடும்பாளுரில் வடதிசைப் படைகள் ஒன்று சேர்ந்து விட்டதாகத் தகவல் தெரிகிறது. நம்மிடம் இருக்கிற படைவீரர்களின் தொகை குறைவு. ஆகவே தென்பாண்டி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கிடைத்தவரை வீரர்களைச் சேர்த்துக்கொண்டு படையின் தொகையைப் பெருக்குவது உன் கடமை. எனவே என்னுடைய இந்தத் திருமுகத்தைப் படித்தவுடன் நீயே ஊர் ஊராகச் சென்று என் விருப்பத்தைச் சொல்லிப் புதிய படைவீரர்களைச் சேர்க்கவும்” என்று மகாமண்டலேசுவரர் கோட்டாற்றுப் படைத்தளத் தளத்திலிருந்த தளபதிக்கு ஓர் அவசரக் கட்டளை அனுப்பியிருந்தார். அதற்கு முதல் நாள்தான் அம்பலவன் வேளான் இடையாற்றுமங்கலத்திலிருந்து ஆயுதங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, மகாமண்டலேசுவரரின் திகைப்பான உண்மையடங்கிய ஒலையையும் தந்து போயிருந்தான். அவற்றால் அவர் மீது பயமும் வெறுப்பும் தளபதிக்கு உண்டாகியிருந்தாலும், கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான். தன் அதிகாரத்துக்கு உட்பட்ட சிறு படைத் தலைவர்களில் சிலரையும் உடன் அழைத்துக்கொண்டு முக்கியமான ஊர்களில் சுற்றினான் அவன். .

மூன்று தினங்களுக்குப்பின் தளபதியிடமிருந்து மகா மண்டலேசுவரருக்குக் கீழ்க்கண்ட பதில் ஒலை வந்து சேர்ந்தது.

“தங்கள் கட்டளைப்படியே படைவீரர்களை சேர்ப்பதற்கு ஊர் ஊராகச் சென்று அலைந்தேன். அலைந்ததற்குப் பயனில்லை. தங்கள் பிரதேசமாகிய மருங்கூர்க்கூற்றம் ஒன்றில் தான் சில நூறு ஆட்கள் படையில் சேர்ந்தனர். மற்ற கூற்றங்களிலெல்லாம் படையிற் சேர முன்வரவில்லை.

பா.தே. 41