பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


கப்பலில் பலமுறை என்னுடைய சந்தேகம் வலுத்தும், பேசாமல் அடக்கிக் கொண்டிருந்தேன் நான். கடைசியில் தனக்கு இடங்கொடுத்த இடையாற்றுமங்கலத்து நங்கையிடமே கத்தியைக் காட்டி மிரட்டிக் கட்டிப்போட்டு விட்டுத் தப்பியிருக்கிறாள் அவள். நாங்கள் ஒரு குற்றமும் அறியோம்” என்று அந்தச் சோகமயமான சந்தர்ப்பத்திலும் தெளிவாகப் பதில் சொன்னான் நாராயணன் சேந்தன்.

“நீங்கள் ஏன் வீணாக அவருக்குப் பதில் சொல்லிச் சிரமப்படுகிறீர்கள்? இப்போது அந்தப் பெண்ணுக்குப் பதிலாக நானே இறந்து போயிருந்தால்கூடக் குமாரபாண்டியர் இவ்வளவு துக்கப்பட மாட்டார். பொய்யும் வஞ்சகமும் நிறைந்தவளாயிருந்தாலும் அவள் கொடுத்து வைத்தவள். அதிருஷ்டக்காரி. இல்லாவிட்டால் குமார பாண்டியரை இவ்வளவு தூரம் அதுதாபத்துக்கு ஆளாக்க முடியுமா?” என்று சற்றே அசூயை தொனிக்கும் குரலில் சேந்தனை நோக்கிச் சொன்னாள் குழல்வாய்மொழி. இந்தச் சொற்களைக் கேட்டுச் சினமும் வெறுப்பும் அடைந்த இராசசிம்மன், “நீங்கள் இருவரும் பேசுகிறவிதம் கொஞ்சங்கட நன்றாயில்லை. அந்தப் பெண் பகவதி என்னதான் பொய்யாக நடந்து ஏமாற்றியிருக்கட்டுமே! அதற்காக இப்படியா ஈவிரக்கமின்றிப் பேசுவீர்கள்? உங்களுக்கு மனித மனத்துக்குரிய நெகிழ்ச்சியே இல்லையா? மரணத்துக்குப் பின்னும் பகைகளை மறந்துதுக்கப்படத் தெரியாமல் இப்படியா விலகிப் பேசுவது?” என்று அவர்கள் இருவரையும் கடிந்து பேசினான்.

“குமாரபாண்டியர் என்னை மன்னிக்க வேண்டும். நான் வெளிப்படையாக மனம் விட்டுக் கூறுகிறேன். நெஞ்சில் துக்கம் ஊறாமல் துக்கப்படுவது போல் நடிக்க எனக்குத் தெரியாது!” என்று வெடுக்கெனச் சொன்னாள் குழல்வாய்மொழி. -

“குழல்வாய்மொழி! நீ கல்நெஞ்சுக்காரி: - х “நீங்களும் சில சமயம் கல்நெஞ்சுக்காரராக இருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்:” . . . . z “போதும். நிறுத்து! இதற்குமேல் இப்போது உன்னுடன் நான் பேசு விரும்பவில்லை.” .