பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

713


“தான் அழியுமுன் உலகத்துக்குத் தன் அனுபவ உண்மைகளில் முடிந்தவற்றை மொழிந்துவிட்டுப் போவது நம் தமிழ் நாட்டு மரபு அப்பா! அதைப் பொருள் மொழிக் காஞ்சி என்பார்கள். இதுவரையில் நான் கூறியவற்றையெல்லாம் அப்படிப்பட்ட வகையில் ஏற்றுக்கொள். போ! நீ போய்த்துங்கு! என்னைக் கொஞ்சம் தனிமையில் மூழ்கவிடு:

சேந்தன் எழுந்து போனான். தூக்கம் வரக்கூடிய நிலையா அது? அத்தனை ஆண்டுகளாக அந்த மேதையின் நிழலில் வாழ்ந்த வாழ்க்கையை மனத்தில் அசை போட்டுக்கொண்டே தூணடியில் விழுந்து கிடைந்தான் அவன். கண்ணிர், கோவில் குறட்டை ஈரமாக்கியது.

விடிந்தது. முதல் நாள் மாலை செய்ததுபோலவே பறளியாற்றில் போய் நெடுநேரம் நீராடிவிட்டு ஈர உடையோடு வந்தார் மகாமண்டலேசுவரர். பிறகு சிவன் கோவிலுள் போய்த் தியானத்தில் அமர்ந்தார். சேந்தனும் நீராடிவிட்டு அவருக்குப் பூக்கொண்டு வந்து கொடுத்தான். அவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை. சேந்தனை ஒலையும் எழுத்தாணியும் கொண்டுவரச் சொன்னார், கொண்டுவந்து கொடுத்தான். ஏதோ எழுதத் தொடங்கினார். -

கதிரவன் மேற்கே சாய்கிற நேரத்துக்கு குழல்வாய்மொழியோடு அம்பலவன் வேளான் அங்கே வந்து சேர்ந்தான். வருகிறபோது இருவருமே பெரிய அளவில் பதற்றமும் பரபரப்பும் அடைந்திருந்தனர்.

“சுவாமி தளபதியும் கழற்கால் மாறனாரும், ஒரு பெரிய கலகக் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு இடையாற்று மங்கலத்தை நோக்கி வெறியோடு தாக்குவதற்கு ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள். நானும் தங்கள் புதல்வியாரும் அவர்களிடம் அகப்படாமல் இங்கு வந்து சேர்ந்தது தெய்வத்துணையால்தான்” என்று அம்பலவன் வேளான் கூறியதைக் கேட்டு மகாமண்டலேசுவரர் அதிர்ச்சியடைந்து விடவில்லை. - .

“நான் எதிர்பார்த்ததுதான். வரட்டும், விரைவாக வரட்டும்” என்று சர்வசாதாரணமாகப் புன்முறுவலோடு பதில் சொன்னார்