பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

722

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


யாரிடமும் சொல்லக்கூடாது’ என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டாராமே? தளபதியை இரகசியமாகச் சிறைப் படுத்தியிருக்கிற அந்தரங்கத்தையும் சொல்லி அதையும் யாரிடத்திலும் கூறவேண்டாமென்று உங்களிடம் கேட்டுக்கொண்டாராம். ஆனால், அதே சமயத்தில் இருளில் அதே இடத்தில் நின்றுகொண்டு காவலைத் தாண்டி தப்பி ஓடிவந்து தளபதியும், ஆபத்துதவிகள் தலைவனும் நீங்களும் மகாமண்டலேசுவரரும் பேசியவற்றை ஒற்றுக் கேட்டுக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஒரு கல்லைக்கூட மகாம்ன்டலேசுவரர் மேல் தூக்கி எறிந்தார்களாமே?” இவ்வாறு கூறிக்கொண்டே வந்த சக்கசேனாபதியை இடைமறித்து, “இவற்றையெல்லாம் இப்போது உங்களுக்கு யார் கூறினார்கள்?” என்று குமாரபாண்டியன் கேட்டான்.

“யாரும் என்னிடம் வந்து கூறவில்லை. கலகக்காரர்களுக்கு நடுவே போய்க் கலந்துகொண்டு, அவற்றைத் தெரிந்து கொண்டேன்!” என்றார் சக்கசேனாபதி.

“தெரிந்து கொண்டவை இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது உண்டா?” -

“நிறைய உண்டு! மகாமண்டலேசுவரரின் சூழ்ச்சிகளை யெல்லாம் தங்களிடம் கூறித் தங்களை அழைத்து வருவதற் காகவே தன் தங்கை பகவதியை இலங்கைக்கு மாறு வேடத்தில் அனுப்பினானாம் தளபதி, அவள் தங்களோடு திரும்பி வரும் காட்சியை காணவே காவலிலிருந்து தப்பி விழிஞத்துக்கு ஓடி வந்து பார்த்தானாம். அவன் தங்கை இறந்த செய்தியை கேட்டவுடன் அவனுக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்பட்டதாம். போதாக்குறைக்குத் தாங்களும் மகாமண்டேலேசு வருடைய சூழ்ச்சிக்கு இணங்கி அவருக்கு வாக்குறுதிகள் கொடுத்தது அவனுக்குச் சினம் மூட்டியதாம். அவனும் ஆபத்துதவிகள் தலைவனும் போய்க் கழற்கால் மாறனாரைப் பார்த்தார்களாம். எல்லோருமாக ஒன்று சேர்ந்து முயன்று ஒரு பெரிய கலகக் கூட்டத்தைத் திரட்டினார்களாம். அந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியைத் தளபதியும் கழற்கால் மாறனாரும் தலைமை தாங்கிக் கொண்டு இடையாற்று மங்கலத்தை வளைத்துத் தாக்குவதற்குப் போயிருக்கிறார்களாம். மற்றொரு