பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி

747


அவன் தடுப்பதன் குறிப்பைப் புரிந்து கொண்ட குமாரபாண்டியன் மெல்லச் சிரித்துக்கொண்டே தன் இரண்டு முன் கைகளையும் அழகுசெய்திலங்கும் விலை மதிப்பற்ற பொற் கடகங்களைக் கழற்றி, “இந்தா, இதை வைத்துக் கொள்! என்னை இக்கப்பலில் பயணம் செய்யவிடு'-என்று சொல்லிக் கொடுத்தான். அவற்றை வாங்கிக்கொண்டதும் கண்கள் வியப்பால் விரியக் குமாரபாண்டியனைப் பார்த்தான் அந்த மீகாமன். மரியாதையோடு விலகி நின்று ஏறிக்கொள்ள வழிவிட்டு வணங்கினான், குமாரபாண்டியன் கப்பலில் ஏறி அதிகம் ஒளி பரவாத ஓரிடம் தேடித் தளத்தில் உட்கார்ந்து கொண்டான். அங்கிருந்து பார்க்கும்போது, அந்த இருளில் விழிளும் துறைமுகமும் அதற்கு அப்பால் பன்னெடுந் தொலைவு இரவால் மூடுண்டிருக்கும் தென்பாண்டி நாடும், தன்னைக் கைவிட்டு நீக்கி எங்கோ விலக்கி அனுப்புவதுபோல் அவனுக்கு ஒர் ஏக்கம் உண்டாயிற்று. அந்த ஏக்கம் சில சொற்களாக உருப் பெற்றது. நிராசையைச் சொற்களாக்கிக் கப்பலிலுள்ள மற்றவர்கள் காதில் விழுந்து விடாதபடி மெல்லத் தனக்குள் முணு முணுத்தான் அவன். -

திருமுடியும் அரியணையும் பெருவீரத்

திருவாளும் நினைப்பொழியக் கருதரிய தென்பாண்டி நிலம் மறந்து . கருணைமிகு தாய் மறந்து சிறுதெரிவை மதிவதனி சிரிப்பினுக்குச்

செயல்தோற்று நினைவலைந்து பொருதுமணம் பிடித்திழுக்கப் பிடித்திழுக்கப்

போகின்றேன் போகின்றேன். உணர்ச்சித் துடிப்பில் உருவான சொற்களைத் திரட்டி இப்படி முணுமுணுத்தபோது இந்தச் சொற்களின் மூலம் தலைதாய்த் திருநாடாகிய தென்பாண்டி நாட்டினிடமே விடைபெற்றுக்கொண்டு விட்டதுபோல் அவனுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. கப்பல் புறப்பட்டுவிட்டது. செம்பவழத் தீவில் தன்னை இறக்கிவிடுமாறு மீகாமனிடம் போய்ச் சொல்லிவிட்டு