மதுரைக் காஞ்சி
73
நல்லுாழி அடிப்படரப்
பல்வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக![1]
என்று பாராட்டுகிறார்.
“போர்க்களத்தில் இறந்தவர்களின் உடம்புகளைப் பேய்கள் விருந்தாக உண்ணும்படி களவேள்வி செய்தவனே, பொதிய மலையை உடையவனே, சேரனும் சோழனுமாகிய இரு பெருவேந்தருடன் வேளிர்சாயப் பொருது அவரைத் தலையாலங்கானத்தில் வென்றவனே, வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனே!” என்று புகழ்கிறார்.
பிறகு, பல நாடுகளின்மேல் படையெடுத்து வேற்றரசர்களுடைய மதிலே முற்றுகையிட்டு உட்சென்று அம்மன்னர்களைப் பொருது வென்று, அவர்களைத் தன் ஏவல் கேட்கும்படி செய்து கொற்றவர்தம் கோனாக விளங்குவதை எடுத்துரைக்கிறார்.
கப்பல்களில் பண்டங்கள் இறங்கியேறும் கடல் துறையையுடைய சாலியூர் என்னும் ஊரைக் கைக்கொண்டான் பாண்டியன். குட்ட நாட்டில் உள்ள மன்னரை வென்றான். முதுவெள்ளிலை என்னும் ஊரிலிருந்த குறுநில மன்னரை அடிப்படுத்தினான். தலையாலங்கானத்தில் ஏழு பகைவர்களைத் தோல்வியுறச் செய்து அவர்கள் முரசை வெளவினான். இந்த வெற்றிகளையும் விரித்துரைக்கிறார் புலவர்.
- ↑ கன்றாகிய யுகம் நமக்கு அடிப்பட்டு கடக்க, ‘வெள்ளமென்னும் எண்ணைப் பெற்ற காலமெல்லாம் அரசாண்ட தன்மையை மேலாக யாவரும் எடுத்துச் சொல்லும்படியாக, உலகத்தையாண்ட சிறந்த மன்னர்களின் வழி வந்தவனே!