80
ஆவர் என்பதையும், உடம்பில் உள்ள பெருநோய் நீங்க வேண்டில் மலர் கொண்டு இத்தலத்தை வழிபடச் செல்லு தலே கலந் தருவதாகும் என்பதையும், இத்தலத்தைத் தலை யினல் தினமும் வணங்குபவர் தினமும் உயர்ந்தோங்கும் நன்மையைப் பெறுவர் என்பதையும், இவ்வாறு வணங்கு பவரே தவமுடையவர்கள் என்பதையும், கம் கருமம் இத் தலத்து இறைவரைக் கைதொழுதலே என்பதையும், இப் பதிகத்தைப் பாடுவார்க்குப் பாவம் இல்லை என்பதையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
இறுதிப் பாட்டால் சீர்காழி நீர்வள முடைய பதி யாதலின், இளையவரால் மீன்கள் கரைகளில் துள்ளிக் கொண்டிருக்கும் என்பதும், திருஞானசம்பந்தர் காட்டில் ஒங்கிய சீருடையர் என்பதும் முதலானவை தெரிய வரு கின்றன.
அருந்தொடர்கள்:
"ஞானமா மலர்கொடு கணுகுதல் நன்மையே” "தலையினல் வணங்குவார் தவமுடை யார்களே.'
ஏழாம் திருமுறை பதிகம் 34
பண்-புறர்ேமை 1. தொண்டரடித் தொழலும், சோதிஇளம் பிறையும் சூதன மென்முலையாள் பாகமும்ஆகி வரும் புண்டரிகப் பரிசாம் மேனியும்வா னவர்கள்
பூசலிட்க் கடல்நஞ் சுண்டகருத் தமரும் கொண்ட எனத்திகழும் கண்டமும்எண் தோளும்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமும்கண் குளிரக் கண்டு தொழப்பெறுவ தென்று கொலோ அடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறைகா 2ளயையே (அ. சொ.) சூது-சொக்கட்டான் காய், இது மாதர் முலைக்கு உவமைப் பொருள், அன-போன்ற, புண்டரிகம்