பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. ஆரம்பப்பள்ளி முதல்
பல்கலைக்கழகம் வரை
படிப்பில் புலியானார்!

அவரது சொந்தக் கிராமமான ஜீராதேயியில், ஆரம்பக் கல்வியைப் பார்சியிலும், சப்ரா பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்விலும், இந்தி, சமஸ்கிருதம் மொழிகளிலும், கல்கத்தா ‘டப்’ காலேஜில் இங்கிலீஷிலும் மற்றக் கல்வித் துறைகளிலும், அதாவது பள்ளி முதல் பல்கலை வரையுள்ள படிப்புத் தேர்வுகளில் கல்வியில் புலியாகவே இருந்து எல்லாவற்றிலும் முதல்வராகவே வெற்றி பெற்றார் பாபு ராஜேந்திர பிரசாத்.

அவரது அறிவுத் திறமையிலே மகிழ்ச்சி பெற்ற ஆசிரியர்கள், ஓராண்டிற்கு இரண்டு வகுப்புகளாய் பாபுவை உயர்த்தினார்கள். ஆனால், இராஜேந்திர பிரசாத்தின் தந்தை மகாதேவ தேசாயக்கு ஆசிரியர்களது இச்செயல் அறவே பிடிக்கவில்லை. இந்த இருவகுப்புத் தேர்வால் தனது மகனுடைய கல்வி குன்றி விடுமே என்று அஞ்சினார். ஆசிரியர்களை அழைத்து பாபுவுக்கு இருவகுப்புத் தேர்வுகளைச் செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இரோஜேந்திர பிரசாத், சமஸ்கிருத மொழியை வீட்டிலேயே கற்றார். இந்தி மொழிப் பயிற்சி அவருக்கு நீண்ட நாட்கள்