பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பாபு இராஜேந்திர பிரசாத்

கோகலே அழைப்பை ஏற்ற ராஜன்பாபு பூனாநகர் சென்று அவரைச் சந்தித்து விவரங்களைத் தெரிந்து கொண்ட பிறகு, கோகலேயின் இந்தியர் ஊழியர் சங்கத்தில் சேர விரும்பினார். ஆனால், அண்ணன் மகேந்திர பிரசாத் அனுமதியைப் பெற்றுச் சேர்ந்திட தமையனாருக்கு கடிதம் எழுதினார்.

அன்புள்ள அண்ணா!

எப்போதும், எந்நேரமும் தங்களுடனேயே இருக்கும் நான், தங்களுடன் அஞ்சல் வாயிலாகப் பேசுவதைக் கண்டு தாங்கள் வியப்படைவீர்கள். தங்களிடம் அச்சமும் - நாணமும் உடைய என்னால், தங்கள் முன் நின்று பேச முடியாத வெட்கமான ஒரு கூச்ச நிலையால், கடிதம் மூலமாகப் பேசுகின்றேன்.

அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகா சபையின் தலைவரான கோபால கிருஷ்ண கோகலே அவர்களை நான் முன்பு சந்தித்த விவரங்களை நீங்கள் அறிவீர்கள். அவர் இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்றுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அவ்வாறு என்னால் செய்ய இயலுமா? முடியக் கூடிய செயல்தானா? என்று அன்று முதல் சிந்தித்தபடியே இருந்தேன். அந்த ஆழ்ந்த யோசனையின் விளைவாக, தேச சேவையில் ஈடுபடுவது நல்லது என்று எனக்குத் தெரிந்தது.

நம்முடைய குடும்பம், வாழ்வும் - வளமும் பெற்றிட என்னையே நம்பி இருக்கிறது. எனவே, என்னுடைய இந்தக் கருத்துக்களைக் கேட்டதும் தாங்கள் திடுக்கிடுவீர்கள் என்பதையும் உணர்கின்றேன். குடும்பத்தினர், தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வார்கள் என்று நான் விலகிவிட்டால், நம் குடும்பத்துக்குப் பெரும் துன்பங்கள் ஏற்படும் என்பதையும் அறிகிறேன்.

ஆனால், குடும்பத்தின் மீதுள்ள கடமையைவிடப் பெரிய அழைப்பு ஒன்று என் உள்ளத்தில் தோன்றியுள்ளது. துன்பத்திலும்,