பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

பாபு இராஜேந்திர பிரசாத்

அப்பாவுக்கும் நான் மனத்துயர் நேரக் காரணமானேன். அது அவரது உயிருக்கே அபாயமாகி விட்டது. இப்போது அம்மா உடல் நிலையும் சரியில்லை. மீண்டும் அம்மாவுக்கும் அபாயம் உருவாக்க மாட்டேன். தந்தை இடத்திலே தந்தையாக உள்ள உங்களையும் தானாத் துயருக்குள்ளாக்கிவிட்டேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா.

தங்களன்புள்ள
இராஜேந்திர பிரசாத்

அண்ணன் மகேந்திர தேசாய் தம்பியினுடைய இரண்டாவது கடிதத்தைப் படித்து விட்டு மனம் மகிழ்ந்தார்! ஒருமுறைக்கு இருமுறை அந்தக் கடிதத்தை அவர் திரும்பத் திரும்பப் படித்துக் களிப்படைந்தார்! கடிதத்தைத் தனது கண்களிலே ஒத்திக் கொண்டு பூரித்துப் போனார்.