பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

பாபு இராஜேந்திர பிரசாத்

கண்டு சோர்ந்து விடாமல் செயல்புரியும் தன்மையினையும் கண்டு, நாடே ராஜன் பாபுவை இரு கை கூப்பி வணங்கி வாழ்த்தியது.

எந்த வித உதவியையும் பிரிட்டிஷ் ஆட்சி, பீகார் மக்களுக்கு செய்யாமல் இருந்தும் கூட, தனியொரு மனிதன் இவ்வளவு தீவிரமாகப் பூகம்ப நிவாரண வேலைகளைச் செய்து வருவதைக் கண்டு, அதே அரசு ராஜன் பாபு பணிகளைப் பார்த்து வெகுவாகப் பாராட்டியது மட்டுமல் வலிய வந்து வேண்டிய உதவிகளைச் செய்து ஆட்சிக்கு நற்பெயரைத் தேடிக் கொண்டது.

பூகம்ப நிவாரணப் பணிகளைப் பொறுத்த வரையில் ராஜேந்திர பிரசாத் கட்சி பேதம் ஏதும் காட்டாமல், எல்லாரிடமிருந்தும் எல்லா உதவிகளையும் ஏற்று, பீகார் மக்களுக்குத் தெய்வம் போல நின்று கடமையாற்றினார்.