பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. காந்தியிசம்; சோசலிசம்
ராஜன்பாபு விளக்கம்!

பதவி, பட்டம், புகழ், பகட்டு, படாடோபம் இவற்றை எல்லாம் தேடி அலைந்தவர் அல்லர் ராஜேந்திர பிரசாத் காந்தி! பெருமான் என்ன சொல்கிறாரோ, அதைச் சேவையாகச் செய்வதே தனது கடமை என்பதே அவரின் லட்சிய நோக்கமாகும்.

பீகார் காந்தி ராஜன் பாபு என்று மக்களால் பரவலாகப் பேசப்பட்ட அவரின் நாட்டுப் பற்றைத் தேச சேவையை இந்திய மக்கள் கவனித்துக் கொண்டேதான் இருந்தார்கள். எடுத்துக்காட்டுக்கு ஒன்று கூறுவதானால், பீகார் மாநிலத்தில் பூகம்பம் புயலாட்டமிட்டபோது, ராஜேந்திர பிரசாத்தின் பெருமை வானளாவ உலகறிய ஒளிர்ந்தது.

இராஜன் பாபுவின் தன்னலம் கருதாத உயர்ந்த பணியையும் செயற்கரிய செயலையும் பாராட்டிக் கெளரவிக்க இந்திய நாடும், அகில இந்திய காங்கிரஸ் தேசிய மகா சபையும் விரும்பியது.

1930-ஆம் ஆண்டுக்குப் பிறகு, 1931, 1932, 1933 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் மகா சபை அமைதியாகக் கூட முடியவில்லை. தில்லியிலும், கல்கத்தாவிலும் நடந்த சிறப்புக் காங்கிரஸ் நடவடிக்கைகள் அமைதியாக நடக்க வழி இல்லை.