பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

83

தனது சொந்த விவகாரங்களால் அரசாங்கப் பணிகளுக்கு தடையேற்பட்டு விடக் கூடாது என்பதுடன், இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் அந்தப் புனித விழாவிற்குத் தன்னால் களங்கமேதும் சூழ்ந்துவிடக் கூடாதே என்றும் முன்னெச்சரிக்கையுடன் பணியாற்றினார்.

இராஜன் பாபுவுக்கு 1962 ஆம் ஆண்டில் அரவது கட்சி, அரசியல், சமூக, கல்வித் தொண்டுகளைப் பாராட்டி, இந்தியாவின் மிகப் பெரிய விருதான ‘பாரத ரத்னா’ என்பதை வழங்கியதுடன் பாரத அரசு பாராட்டி அவருக்கு விழாவெடுத்து மகிழ்ந்தது. இவ்வாறு ராஜன்பாபு அமைதியின் உருவமாக, ஆற்றலின் திறனாக ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் தில்லி மாநகரிலே தங்கி எல்லோருக்கும் நல்லவராகவும் வல்லவராகவும் வாழ்ந்தார்.