பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

பாப்பா முதல் பாட்டி வரை

வேண்டும். சிலருக்குத் தொடர்ந்து பேதி, அல்லது மலச்சிக்கல் இருந்தால், அதற்கேற்ப மாத்திரை, மருந்துகளை கொடுக்க வேண்டும்.

சுத்தம் சுகம் தரும் : சுத்தமான காற்று, நீர், சீரிய உடற்பயிற்சி, தியானம் ஆகியவை தான், தற்போதைய அவசர வாழ்க்கை முறைக்குச் சரியான மருந்து. காய்ச்சிய குடிநீர், முடிந்த அளவு சுத்தமான காற்றைச் சுவாசிப்பது, உடற்பயிற்சி, எல்லாவற்றுக்கும் மேலாகத் தியானம் செய்வது மன உளைச்சலையும், அழுத்தத்தையும் குறைக்கும்.