பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

பாப்பா முதல் பாட்டி வரை

தற்போது மகளின், படிப்பில் பெற்றோர் அதிகக் அக்கறை செலுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. எந்தவிதப் பாதிப்பும் இன்றி, முழுமையான கல்வி அறிவு பெற்று, மகளுக்கு வளமான வாழ்க்கை அமைய, 10 வயது ஆன உடனேயே பக்குவமாக, அனைத்து விஷயங்களையும் தாய் சொல்லித் தருவது மிகவும் நல்லது. ஏனெனில், சிறு வயதிலேயே, இவ்வாறு மனப் பக்குவத்தை, மென்மையாக ஏற்படுத்திவிட்டால் பிளஸ் 2 படிக்கத் தொடங்கும்போது, அவர்களே பொறுப்புள்ளவர்களாக மாறி, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு உயர்ந்து விடுவார்கள்.

மாதவிடாய்ப் பிரச்சனை : ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை 7-ம் வகுப்பு படிக்கும்போது, பூப்பெய்துகிறாள். பூப்பெய்துவதற்கு ஒரு மாதம் முன்பு முகத்தில் பருக்கள் வரும். இது சற்று அதிர்ச்சியாக இருக்கும். பூப்பெய்த பிறகு, பெரும்பாலும் மாதம் ஒரு முறை மாதவிடாய் வரும். சில பெண்களுக்கு இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மாதவிடாய் வரும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருவது, போகப் போகச் சரியாகிவிடும். ஆனால், தொடர்ந்து இரண்டு மாதத்துக்கு ஒரு முறை வந்தால், மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். பூப்பெய்த பிறகு, விட்டு விட்டு மாதவிடாய் வருவது 6 மாதத்துக்குத் தொடர்ந்தாலே, மருத்துவ சிகிச்சை அவசியம்.

மாதவிடாய்க் காலத்தில், இடுப்பில் வலி இருக்கும். சிலருக்கு மாதவிடாய்க்கு முன்பும், பின்பும் இடுப்பில் வலி இருக்கும். வலி இருக்கும் போது, வெந்நீரில் குளித்தால் சற்று நிவாரணம் கிடைக்கும். மாதவிடாய் நின்றவுடன், வலி போய்விடும். மாதவிடாய்க் காலத்தில், இடுப்பு உறுப்புகளில் ரத்த ஒட்டம் அதிகமாக இருப்பதால்,