பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குழந்தைகள் அறுவைசிகிச்சை பயப்பட வேண்டாம்

பிறக்கும் குழந்தைகள் பிறந்தது முதல் 15 வயது வரை உள்ள அனைவருமே குழந்தைகள் தான்.

பிரசவத்தில் ஏற்படும் கோளாறுகள், உறவில் திருமணம், கருவுற்றிருக்கும் போதே, தாய் பல மருந்துகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுதல், கருவுற்றிருக்கும்போது, எக்ஸ்ரே கதிர்கள் ஊடுருவுதல், பிறவி ஊனங்கள், ஆகிய காரணங்களால், சில குழந்தைகளுக்குப் பிறந்த உடனோ அல்லது 3 வயதுக்குள்ளோ, அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு நோய்கள் ஏற்படுகின்றன.

கருவில் குழந்தை இருக்கும்போதே, 6, 7-வது மாதத்தில் பிறக்கும் குழந்தையின் கோளாறை, அல்ட்ரா சோனோகிராம் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும். கோளாறு இருந்து அறுவை சிகிச்சை தேவை என்றால், நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்து விடுவது மிகவும் நல்லது.